விருத்தாசலம் கழக மாவட்டத் தோழர்கள் இல்லங்களில் கழகக் கொடி ஏற்றப்பட்டது மாவட்ட பொறுப்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு

1 Min Read

விருத்தாசலம், பிப். 16- விருத்தாசலம் கழக மாவட்டத் தோழர்கள் இல்லங்களில் திராவிடர் கழக இலட்சியக்கொடி ஏற்றப்பட்டது. கழகக் கொடி ஏற்றச் சென்ற மாவட்டப் பொறுப்பா ளர்களுக்கு கழகக் குடும்பத்தினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

இலட்சியக்கொடி
விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தோழர்கள் இல்லங்களில் கழகத்தின் இலட்சியக் கொடி ஏற்றுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, பிப்ர வரி 8 ஆம் தேதி பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கழகத் தோழர்கள் இல்லங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து பிப்.9 ஆம் தேதி விருத் தாசலத்தில் உள்ள மாவட்ட காப்பாளர் அ.இளங்கோவன், நகர அமைப்பாளர் சு.காரல்மார்க்ஸ், வலசை கிராமத்தில் உள்ள ஆசைமணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் சே. பெரியார் மணி, வேப் பூரில் உள்ள மாவட்ட துணைச் செயலாளர் பி.பழனிச்சாமி, பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ஆ.செந்தில், சிறுபாக்கத்தில் உள்ள மங்களூர் ஒன்றிய தலைவர் சி.சுப் பிரமணியன், ம.புடையூர் கிராமத்தில் உள்ள மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கட.இராசா, கழுதூர் கிராமத் தில் உள்ள வேப்பூர் வட்டார செயலாளர் ம.இளங்கோவன், திட்டக்குடி நகரத் தலைவர் வெ.அறிவு, தலைமைக்கழகச் சொற் பொழிவாளர் புலவர் வை. இளவரசன், கோழியூர் கிராமத்தில் உள்ள செல்வராசு, மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் ஆனந்த், இறையூர் கிராமத்தில் உள்ள பொதுக்குழு உறுப்பினர் தங்க. இராசமாணிக்கம், செம்பேரி கிராமத்தில் உள்ள பெண்ணாடம் நகர தலைவர் செ.க. இராசேந்திரன், முருகன் குடி கிராமத்தில் உள்ள நகர செயலாளர் அ.பச்சமுத்து ஆகியோர் இல்லங்களில் மாவட்டதலைவர் த.சீ. இளந்திரையன் தலைமையில், மாவட்ட செயலாளர் ப.வெற்றிச் செல்வன் கழகத்தின் லட்சியக்கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி தலைவர் செ. சிலம்பரசன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ஆ.செந்தில், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சு.தமிழ்ச்செல்வன், திட்டக்குடி நகர தலைவர் வெ.அறிவு, கா.அறிவழகன் மற்றும் கழகக் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *