கூடுவாஞ்சேரியில் பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி

1 Min Read

சென்னை, ஜூலை 14 – பணிபுரியும் மகளிர் விடுதி களின் தேவை தற்போது அதிகரித்து வருவதைத் கருத்தில் கொண்டு, கூடுவாஞ்சேரியில் 7 கோடியே 44 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவிலும், திருச்சியில் 5 கோடியே 65 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் செலவிலும் 226 மகளிர் தங்கும் வகையில் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த 2 புதிய மகளிருக்கான விடுதிக் கட்டடங்களை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (13.7.2023) திறந்து வைத்தார். 

மேலும், அடையாறு, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருநெல்வேலி மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் 458 மகளிர் தங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட 7 பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.  உடனடியாக பயன்பாட்டிற்கு வரும் இத்தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு www.tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலம் பணிபுரியும் மகளிர் விண்ணப்பிக்கலாம். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *