மழையின் ஈரப்பதத்தால் வீட்டுச்சுவர் இடிந்தது

Viduthalai
0 Min Read

திருச்சி, நவ.27 திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சூரம்பட்டி ஊராட்சி கேணி பள்ளம் கிராமத்தில், பொன்னுசாமி என்பவரின் அஸ்பெஸ்டாஸ் வீட்டின் ஒரு பக்க சுவர் மழையின் காரணமாக இடிந்தது. சுவர் வெளிப்பக்கமாக விழுந்ததால் எந்த சேதமும் ஏற்பட வில்லை. இதுகுறித்த அறிக்கையை கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் மற்றும் வருவாய் ஆய்வாளர் வீரபாண்டியன் ஆகியோர் வட்டாசியர் பாத்திமா சகாயராஜிக்கு சமர்பித்தனர். வருவாய் கோட்டாட் சியர் ராஜன் வழியாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பித்தார். மழையின் காரணமாக வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்த பொன்னுசாமிக்கு நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *