இந்தியர்களுக்கு கைவிலங்கிட்டு நாடு கடத்தும்அமெரிக்க அரசின் ஆணவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

viduthalai
2 Min Read

சென்னை, பிப்.15 இந்தியர் களுக்கு கை விலங்கிட்டு நாடு கடத்தும் அமெரிக்க அரசின் ஆணவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைத்து நடத்திய அனைத்து கட்சி ஆர்ப் பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

14-02-2025 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் இரா. முத்த ரசன் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உரை யாற்றுகையில் கூறியதாவது:

மனித உரிமை மீறலுக்கு எதிரானதாக அமெரிக்க அரசு செய்திருப்பது மிக கொடூரமானது.
ஜனநாயக நாட்டில் வாழ்ந்து வரக் கூடிய மக்களுக்கு ஓர் அரசு எடுக்கும் நட வடிக்கை சரியா? என் பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பல்வேறு நாடுகளில் மக்கள் குடிபெயர்கிறார்கள், குடியுரிமை பெறாத வர்களுக்கு உரிய முறை யில் வழிகாட்டி, அவர்களை வெளியேற்றுவது வேறு விதமான போக்கு. ஆனால் இங்கு நடந்ததோ முற்றிலும் மாறுபட்டதாகும்.

வேதனைக்குரியதாகும்!

விலங்குகளை போல கை, கால்களை கட்டி, அடிப்படை வசதிகள் செய்து தராமல், ராணுவ விமானத்தில் பயணம் செய்ய வைத்திருப்பது வேதனைக் குரியதாகும்.

அமெரிக்கா அரசின் ஆணவப் போக்கை கண்டித்து சிறிய நாடுகள் கூட குரல் கொடுத்து வருகின்றன. ஆனால், 144 கோடி மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் மோடி தன் நாட்டு மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிக் கொண்டிருந்த வேளையில் அவர் கும்பமேளாவில் குளித்துக் கொண்டிருக்கிறார்.

அமெரிக்க அரசின் ஆணவப் போக்கை கண்டித்ததால், அந்த நாட்டின் மீது வரி விதிப்பு செய்யக் கூடிய போக்கை கடுமையாக கண்டிக்கிறோம்.

தேவையான நேரத்தில் முக்கியமான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து நடத்திக் கொண் டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதன் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.

பங்கேற்றோர்

டி.கே.எஸ்.இளங்கோவன் (திராவிட முன்னேற்ற கழகம்), வைகோ எம்.பி (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்), தொல் திருமாவளவன் எம்.பி. (விடுதலை சிறுத்தைகள் கட்சி), எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொங்கு மக்கள் தேசிய கட்சி), தோழர்.மு.வீரபாண்டியன் (சிபிஅய் மாநில துணைச் செயலாளர்), காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கு.செல்வப் பெருந்தகை (இந்திய தேசிய காங்கிரஸ்), தோழர். பெ.சண்முகம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தோழர்.பழ. ஆசைதம்பி (சிபிஅய் (எம்.எல்), கே.எம்.காதர் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), ஆ. அருணாச்சலம் (பொதுச் செய லாளர் மக்கள் நீதி மய்யம்) டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் (மாநில செயலாளர், AIPSO) ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *