மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இரண்டு மடங்கு உயர்வு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

1 Min Read

சென்னை, ஜூலை 14 – மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 1 முதல் அய்ந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை ஆயிரம் ரூபாயி லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரூ.3000-லிருந்து ரூ.6000 ஆகவும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரூ.4000-லிருந்து 8000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.6000-லிருந்து ரூ.12000 ஆகவும் தொழிற்கல்வி மற்றும் முதுகலை படிப்பு மாணவர்களுக்கு ரூ.7000-லிருந்து ரூ.14,000 ஆகவும் உயர்த்தி அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *