முதலீடுகளுக்காக நமது மரியாதையை விட்டுக் கொடுக்கலாமா?

1 Min Read


எலான் மஸ்கின் குடும்ப மேஜையில் மோடியின் அதிகாரப் பிரதிநிதிகள் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைமை அமைச்சர் பாதுகாப்பு, வணிகம் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ளார்.
உலகின் முதல் பணக்காரான எலான் மஸ்க் உடனான சந்திப்பு நடக்கிறது. மோடியோடு வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலர், அமெரிக்காவிற்கான இந்தியத் தூதரக தலைமை அதிகாரி, உள்ளிட்ட மிகவும் உயர் பதவியில் முக்கிய முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட பதவியில் உள்ளவர்கள் அமர்ந்திருக்க எதிர் தரப்பில் எலான் மஸ்க் அவரது பிள்ளைகள் மற்றும் மனைவி, பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் ஆயாவும் உட்கார்ந்திருக்கிறார்.

இது ஒருவகையில் ஒட்டுமொத்த இந்தியாவையும் எலான் மஸ்க் என்ன பார்வை பார்க்கிறார் என்பதைத்தானே எடுத்துக்காட்டுகிறது. இதை எப்படி மோடி அனுமதிக்கிறார்?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *