பெரியார் கல்வி நிறுவன மாணவ-மாணவிகள் சுருள்சண்டை – டேக்வாண்டோ போட்டிகளில் சாதனை

viduthalai
1 Min Read

திருச்சி, பிப். 14- திருச்சி மாவட்ட சிலம்பக் கழகம் மற்றும் ஜோதிவேல் சிலம்பக் கூடம் இணைந்து, கடந்த 09/02/2025 (ஞாயிற்றுக்கிழமை) உறையூரில் நடத்திய தமிழர் சிலம்பக் கலைத் திருவிழாவில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அய்ந்தாம் வகுப்பு மாணவர் கே.சிறீ.ஹரிராம் சுருள் சண்டைப் பிரிவில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். சாதனை மாணவனைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

திருச்சி மாவட்ட மாஸ்டர் பீஸ் அபாகஸ் நிறுவனம், காரைக்குடியில் கடந்த 02/02/2025(ஞாயிற்றுக்கிழமை) நடத்திய மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டியில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவிகள், டி.சகானா மாவட்ட அளவில் முதலிடமும், எம்.ஷிஃபானா பேகம் இரண்டாம் இடமும் பிடித்துப் பள்ளிக்குப் பெருமை தேடித் தந்துள்ளனர். மாணவிகளுக்குப் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.

திருச்சி மாஸ் டேக்வாண்டோ குழுமமும், செயின்ட்.ஜோன் ஆஃப் ஆர்க் பன்னாட்டுப் பள்ளியும் இணைந்து நடத்திய, மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவன் ஏ.சந்தோஷ், 32 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் முதலிடமும் தங்கப் பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவனைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *