தஞ்சை கவிஞர் பகுத்தறிவுதாசன் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களிடம் விடுதலை சந்தா ரூ.6,000 வழங்கினார்.
கோபி கழக மாவட்டம் பீர்கடவு ஊராட்சி, பட்டரமங்கலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக கிளை துவக்க விழா பொதுக்கூட்டத்தில் இந்த கிராமத்தில் நூலகத்துடன் கூடிய பெரியார் படிப்பகம் அமைய வேண்டும் என கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார்
படிப்பகம் அமைத்தால் தனது பங்காக ரூ.10,000 வழங்குவதாக கோபி ராஜமாணிக்கம் அறிவித்தார்.
படிப்பகத்திற்கு தனது சார்பாக ஓர் ஆண்டு விடுதலை சந்தா வழங்குவதாக தஞ்சை கவிஞர் பகுத்தறிவு தாசன் அறிவித்து. உடனடியாக பட்டரமங்கலத்திற்கு ஒரு விடுதலை சந்தா – தனக்கு ஒரு சந்தா – தஞ்சை விஜயன் வழங்கிய ஒரு சந்தா என மூன்று ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூபாய் 6,000 கழகப்பொதுச் செயலாளரிடம் வழங்கினார் (12.02.2025).