நன்கொடைகள்

1 Min Read

தஞ்சை கவிஞர் பகுத்தறிவுதாசன் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களிடம் விடுதலை சந்தா ரூ.6,000 வழங்கினார்.
கோபி கழக மாவட்டம் பீர்கடவு ஊராட்சி, பட்டரமங்கலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக கிளை துவக்க விழா பொதுக்கூட்டத்தில் இந்த கிராமத்தில் நூலகத்துடன் கூடிய பெரியார் படிப்பகம் அமைய வேண்டும் என கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார்

படிப்பகம் அமைத்தால் தனது பங்காக ரூ.10,000 வழங்குவதாக கோபி ராஜமாணிக்கம் அறிவித்தார்.
படிப்பகத்திற்கு தனது சார்பாக ஓர் ஆண்டு விடுதலை சந்தா வழங்குவதாக தஞ்சை கவிஞர் பகுத்தறிவு தாசன் அறிவித்து. உடனடியாக பட்டரமங்கலத்திற்கு ஒரு விடுதலை சந்தா – தனக்கு ஒரு சந்தா – தஞ்சை விஜயன் வழங்கிய ஒரு சந்தா என மூன்று ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூபாய் 6,000 கழகப்பொதுச் செயலாளரிடம் வழங்கினார் (12.02.2025).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *