கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனின் சகோதரி தமிழ்செல்வி – ராம். கோவிந்தன் ஆகியோரின் மகள் கோ.தமிழ் நிலா (எ) வர்ணாவிற்கும், சேலம் வி. சண்முகவடிவேலு – என் கீதா ஆகியோரின் மகன் ச. ஜோதி சங்கருக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.தமிழ்ச்செல்வி வரவேற்புரையாற்றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உரையில் 35க்கும் மேற்பட்ட சுயமரியாதை சீர்திருத்த மணவிழாக்களை இந்த குடும்பம் நடத்தி உள்ளது. நாடு முழுவதும் எண்ணற்ற சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்று வருகிறது என்பது தந்தை பெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டார். (12.2.2025)