கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனின் சகோதரி தமிழ்செல்வி – ராம். கோவிந்தன் ஆகியோரின் மகள் கோ.தமிழ் நிலா (எ) வர்ணாவிற்கும், சேலம் வி. சண்முகவடிவேலு – என் கீதா ஆகியோரின் மகன் ச. ஜோதி சங்கருக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.தமிழ்ச்செல்வி வரவேற்புரையாற்றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உரையில் 35க்கும் மேற்பட்ட சுயமரியாதை சீர்திருத்த மணவிழாக்களை இந்த குடும்பம் நடத்தி உள்ளது. நாடு முழுவதும் எண்ணற்ற சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்று வருகிறது என்பது தந்தை பெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டார். (12.2.2025)
தமிழ்செல்வி – ராம் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books