திருப்பரங்குன்றம் மலை விவகாரம்

2 Min Read

நல்லிணக்கத்தையே விரும்புகிறோம்;
மதப் பாகுபாட்டை விரும்பவில்லை
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தகவல்

மதுரை, பிப்.12 திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மத பாகுபாட்டை யாரிடமும் காட்ட விரும்பவில்லை. அரசு நல்லிணக் கத்தையே விரும்புகிறது என அரசுத் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கூறப்பட்டுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த லட்சுமி சேனசுவாமி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை திருப்பரங்குன்றம் மலையில் சமண நினைவுச்சின்னங்கள் பல உள்ளன. திருப்பரங்குன்றம் கோயில் சமண சமயத்திற்கான பல கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் உள்ள தமிழ் – பிராமி எழுத்துகள், சமண காலத்தைச் சேர்ந்தவை என் பதை உறுதிப்படுத்துகிறது. திருப்பரங் குன்றம் மலைப் பாறையில் சுமார் ஓர் அடி உயரத்தில் 2 சமண அடையாளங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இப்பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, மற்ற மதங்களைச் சேர்ந்த சிலர் சமண குகைகளை சீர்குலைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இது சமண மக்களின் மத உணர்வுகளை பாதித்துள்ளது. மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை பிறர் உரிமை கொண்டாடுவது ஏற்கத் தக்கது அல்ல. எனவே, சமணர் குன்று என அறிவித்து, சமண கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற் கொள்ள தடை விதிப்பதோடு, திருப் பரங்குன்றம் மலையை மீட்டெடுத்து, முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் முன் நேற்று (10.2.2025) விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஹசன் முகமது ஜின்னா, கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீராகதிரவன் மற்றும் ெஜ.ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, ‘‘திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ஏற்ெகனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அரசு யாரிடமும் மதப் பாகு பாட்டை காட்ட விரும்பவில்லை. நல்லிணக்கத்தையே விரும்புகிறது. தமிழ்நாடு தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’’ என கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், தமிழ்நாடு தொல்லியல் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக ஏற்ெகனவே நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளோடு இந்த மனுவையும் சேர்த்து பட்டியலிடுமாறு உத்தரவிட்டு விசா ரணையை தள்ளி வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *