நன்கொடை

1 Min Read

திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்பேர் பெரியார் பெருந்தொண்டர் வா.கோவிந்தராஜுவின் வாழ்விணையர் கோ.நாகரெத்தினம் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை (12.02.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3,000 அவர்களது குடும்பத்தினர் சார்பாக நன்கொடையாக அளிக்கப்பட்டது.

– – – – –

சாத்தூர் அ.செல்வம் மறைவு

நன்கொடை, மறைவு
சாத்தூர் நகர மேனாள் திராவிடர் கழகச் செயலாளர் அ.செல்வம் (வயது68) உடல்நலக் குறைவு காரணமாக 10.02.2025 திங்கள் அதிகாலை 4 மணியளவில் இறுதி எய்தினார். இராசை மாவட்ட ப.க. தலைவரும், சாத்தூர் நகர்மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக், விருதுநகர் மாவட்ட கழக. செயலாளர் விடுதலை தி.ஆதவன், இளைஞரணித் தலைவர் இரா.அழகர், சாத்தூர் நகர்மன்றத் தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான ச.குருசாமி மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்கள் தோழமை இயக்க நண்பர்கள் அன்னாரது இல்லம் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். இரவு 7 மணியளவில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *