ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் நினைவு வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

1 Min Read

ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் நினைவு வாசகர் வட்டத்தின் துணைத் தலைவர் ஹாரூன், சோழவரம் திமுக ஒன்றிய அவைத்தலைவர் காசிம் முகமது, துபாயைச் சேர்ந்த சாகுல், மதுரையைச் சேர்ந்த ஆண்டவர் முகமது ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பயனாடை அணிவித்தனர். உடன் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி. (சென்னை, 10.02.2025)

திராவிடர் கழகம்

தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ. நாத்திகன் தனது 71 ஆம் பிறந்த நாளையொட்டி (11.02.2025) , “பெரியார் உலகம்” நன்கொடையாக 5,000/- ரூபாயைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், நகரச் செயலாளர் சு.மோகன்ராஜ், கு. வைத்தியலிங்கம் மற்றும் சீனிவாசன். (சென்னை, 10.02.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *