திருச்சி, நவ. 14 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் உங்கள் இயக்கத் தில் எவ்வளவு பேர் உறுப் பினர்கள் என்று கேட் டால் அதற்கு ஆசிரியர் அவர்கள் சொல்லுவார் கள் கண்ணுக்குத் தெரிந்த கருப்பு சட்டைக்காரர்களை விட கண்ணுக்குத் தெரியாத பெரியார் தொண்டர்கள் ஏராளம் என்று சொல்வார்கள்.
அந்த வகையில் திருச்சி திருவெறும்பூர் அருகில் உள்ள எழில் நகரில் வாழ்ந்த ஒரு பெரியார் பெருந்தொண்டருடைய இரங்கல் நிகழ்ச்சி நவ.13 அன்று நடைபெற்றது. அவருடைய பெயர் மா.கிருஷ்ணமூர்த்தி (வயது 86) பெல் நிறுவனத் தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருடைய சொந்த ஊர் மயிலாடு துறை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்புகலூர் என்கின்ற கிராமமாகும். அவர் பெல் நிறுவனத்தில் பணி செய்த பொழுது திராவிட முன்னேற்றக் கழக தொழிற்சங்கத்தில் பணியாற்றி இருக்கிறார். ஓய்வு பெற்று வந்த பிறகு அவர் குடியிருக்கும் பகுதி யில் பல்வேறு மக்கள் நல அமைப்புகளோடு இணைந்து சிறப்பாக மக் கள் பணியாற்றியிருக்கி றார். ஆனால் திராவிடர் கழகத்தில் நேரடியாக ஈடு பட்டது இல்லை உறுப் பினராகவும் இருந்ததில்லை.
அவர் நோய்வாய்ப் பட்டு இறக்கும் தருவா யில் தன்னுடைய மறை வின் போது எனக்கு எந்த வித மத சடங்கும் செய்யக் கூடாது. பெரியாருடைய கொள்கையின்படி என் னுடைய உடல் அடக்கம் செய்யப்பட வேண்டு மென்று தன்னுடைய பிள்ளைகளிடம் சொல்லி இருக்கிறார். அவருக்கு ஒரு மகனும் மகளும் உண்டு நன்கு படித்தவர்கள் மகன் தற்போது மலேசியாவில் பணியாற்றி வருகிறார். அவருடைய பேரப்பிள் ளைகளும் நன்கு படித் திருக்கிறார்கள்.
தன்னுடைய தந்தையி னுடைய இறுதி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவருடைய உடலை அடக்கம் செய்ய வேண் டும். என்று விரும்பி அவ ரது குடும்பத்தினர். திரா விடர் கழகத் தோழர் களை அணுகி பெரியார் தொண்டர்களை எப்படி அடக்கம் செய்வீர்களோ அதுபோல எங்கள் தந் தையையும் நீங்கள் உடன் இருந்து அடக்கம் செய்து உதவ வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
திராவிடர் கழகத் தோழர்கள் அங்கு சென்று அவருடைய உடலில் அவர் விருப்பப்படி திரா விடர் கழகக் கொடியை போர்த்தி இருக்கிறார் கள். அந்தப் பகுதி முழு வதும் திராவிடர்கழகக் கொடி கட்டப்பட்டிருந் தது. அவருடைய இறப்பை மக்களுக்கு அறிவிக்கும் பொருட்டு ஒரு வாகனத் தில் ஒலிபெருக்கி வைத்து பெரியார் கருத்துகளை பிரச்சாரம் செய்து ஊர் மக்கள் மத்தியிலே இப் படிப்பட்ட பெரியார் தொண்டர் மறைந்து விட்டார். அவரது உடல் அடக்கம் இத்தனை மணிக்கு நடைபெறும் என்று பிரச்சாரம் செய்து கொண்டு வந்தார்கள். பெரியாரைப் பற்றிய பாடல் ஒலிபரப்பானது.
உடலுக்கு மரியாதை
மறைந்த மா.கிருஷ்ண மூர்த்தி உடலுக்கு திரா விடர் கழகத் தோழர்கள் திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதன் பின் மறைந்த பெரியார் பெருந்தொண் டருடைய விருப்பத்தின் படி அவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆறுமுகம் தலைமை வகித்து பேசு கையில், ஒரு பெரியார் தொண்டர் எப்படி இருக்க வேண்டும் என்ப தற்கு உதாரணமாக இவர் இருந்திருக்கிறார் அந்தக் கொள்கை உணர் வோடு சுயமரியாதை உணர்வோடு வாழ்ந்து தன்னுடைய பிள்ளைக ளுக்கும் அந்த உணர்வை யூட்டி நல்லபடியாக வளர்த்திருக்கிறார். அதனால் அவருடைய பிள்ளைகள் அவருடைய விருப்பத்தின்படி எந்த வித மத சடங்கும் செய் யாமல் அவருடைய உடலை அடக்கம் செய்ய எண்ணியிருப்பது பாராட்டுக்குரியது என்று கூறினார்.