சிவகங்கை ஒக்கூரில் கழக தெருமுனைப் பிரச்சார கூட்டம்

Viduthalai
1 Min Read

ஒக்கூர், பிப். 10- நேற்று (10.2.2025) மாலை 6 மணிக்கு சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் அறிஞர் அண்ணா நினைவு நாள், பெரியார் பிறவாமலிருந்தால் என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் சி.தெய்வேந்திரன் தலைமையில், மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம், கிளைக் கழகத் தலைவர் கணேசன் ஒன்றிய மாணவர் கழகத்தலைவர் தெ.எடிசன் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் சலுகாபுரம் பச்சமுத்து வரவேற்புரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேக ரன், கழக காப்பாளர் வழக்கு ரைஞர் ச.இன்பலாதன், மாவட் டத்தலைவர் இரா.புகழேந்தி, மாவட்ட அமைப்பாளர் மானாமதுரை ச.அனந்தவேல், புஷ்பவள்ளி ஆகியோர் உரையாற்றினார்கள்.
வடக்குஒன்றிய திமுக செயலாளர் ஆ.முத்துராமலிங்கம் பங்கேற்று ”தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப்பால், எழுத்தால், பேச்சால்தான், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் அனைத்து மக்களிடமும் சென்றடைந்துள்ளது. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தொண்டாற்றும்திராவிடர் கழகத் தோழர்களை பாராட்டுகிறேன் என தொடக்கவுரையாற்றினார்.

கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வம் ”தமிழ்நாட்டிற்கு நிதியளிக்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் போக்கினையும், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் மனிதநேய கொள்கைகள் உலக மயமாகிவருவதை ஏற்றுக்கொள்ள முடியாமலும், திராவிட மாடல் ஆட்சி செல்லும் பாதை பெரியார் திடலில், தமிழர் தலைவர் அவர்களால் வகுக்கப்படுகிறது என்பதை பொறுத்துக்கொள்ள முடியாமலும், பார்ப்பனர்கள் சிலபைத்தியங்களைப் பிடித்து அவதூறுகளை பரப்பி வரு கிறார்கள். அவர்களுக்கு உரிய வைத்தியத்தை மானமறவர்களால் விரைவில் வழங்கப்படும்” என சிறப்புரையாற்றினார்.

திமுக மாவட்டப் பிரதிநிதி லெ.சோமசுந்தரம் , இரா.ஆறுமுகம் – இருவரும் கூட்டம் எழுச்சியுடன் நடைபெறுவதற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பை வழங்கி சிறப்பித்தார்கள்.
கழகத்தில் இணைந்துள்ள மானாமதுரை புஷ்பவள்ளி அவர்களுக்கு திமுக ஒன்றிய செயலாளர் ஆ.முத்துராமலிங்கம் பயனாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.
புஷ்பவள்ளி ‘பெரியார் பிஞ்சு’ இதழுக்கு சந்தா வழங்கினார். ஒன்றிய அமைப்பாளர் கீழப் பூங்குடி முருகேசன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *