கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
1 Min Read

11.2.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது, மக்களவையில் தயாநிதி மாறன் காட்டம்.
* தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கும் ஆளுநருக்கு எதிரான வழக்கு; தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* முதலமைச்சர் பைரன்சிங் பதவி விலகல்: மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
* உள்ளாட்சித தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது பிற்படுத்தப் பட்டோர் குழு. அரசு பரிசீலிக்கும் என முதலமைச்சர் ரேவந்த் கருத்து.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தங்கள் கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு “பொருத்தமான தீர்வு” காணவில்லை என்றால், பிப்ரவரி 25 ஆம் தேதி ஷம்பு எல்லையில் இருந்து டில்லிக்கு விவசாயிகள் குழு மீண்டும் நடைப் பயணம் மேற்கொள்ளும் என்று பஞ்சாப் விவசாயி தலைவர் சர்வான் சிங் பாந்தர் அறிவிப்பு.

தி ஹிந்து:
* மாதங்கள் மற்றும் ஆண்டுகளாக மாநில மசோதாக் களுக்கு தமிழ்நாடு ஆளுநர் நீண்ட காலமாக “மவுனம்” காத்தது ஏன்? பின்னர் திடீரென்று நான் அவற்றை குடியரசுத தலைவரிடம் பரிந்துரைத் துள்ளேன் என்று கூறுகிறார்,” என்று நீதிபதி ஆர். மகாதேவன் உடன் இருந்த அமர்வில் நீதிபதி பர்திவாலா கேள்வி.

.- குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *