கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கவுரிஸ்வர கோவிலில் பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ‘ஆண்கள் மேல் சட்டையை அகற்றி விட்டுத் தான் கோவிலுக்குள் வர வேண்டும்’ என்ற முறை முடிவுக்கு வருகிறது.
பிப்ரவரி 4ஆம் தேதி முதல் கோவி லுக்குள் ஆண்கள் சட்டை அணிந்து கொண்டும் வர அனுமதி தரப்பட்டுள்ளது.
‘‘கோவிலுக்கு வருபவர் பார்ப்பனரா, பார்ப்பனர் அல்லாதவரா என்று அறிந்து கொள்ள சட்டையில்லாமல் கோவிலுக்கு வர வேண்டும் என்ற விதிமுறையை பார்ப்பனர்கள் உருவாக்கினர்’’ என்று மறைந்த பேராசிரியர் தொ. பரமசிவன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
அதையும் இந்த இடத்தில் நினை வூட்டுவது பொருத்தமாகும்.
இந்துக் கோயில் என்கிறார்கள். ஒரு கோயிலில் சட்டை அணிந்து கொண்டு உள்ளே வரலாம்; இன்னொரு கோயிலில் மேற்சட்டை அணிந்து கோயிலுக்குள் நுழையக் கூடாது என்றால் இது முரண்பாடல்லவா!
ஒவ்வொரு கால கட்டத்தில், ஒவ்வொரு கிறுக்கன் எழுதி வைத்தது எல்லாம் அந்தந்த கோயில் சம்பிரதாயம் ஆகி விடுகிறது – அப்படித்தானே!
இந்த இலட்சணத்தில் ‘ஒரே நாடு, ஒரே மதம்’ கோஷம் வேறு! இந்தியா ஒரே நாடும் அல்ல – (இந்தியா ஒரு துணைக் கண்டம், பல மொழி, பல இனம், பல பண்பாடு கொண்டது என்பது நினைவிருக்கட்டும்!)
அதேபோல ‘‘இந்து மதம் என்பது ஒருவரையறைக்கு உட்பட்டதும் அல்ல – இந்தியா முழுமைக்குமான ஒரே மதமும் அல்ல! இன்னும் சொல்லப் போனால் இதற்கு இந்து மதம் என்ற பெயருமல்ல – ஏதோ வெள்ளைக்காரன் இந்தப் பெயரைச் சூட்டினான் – தப்பித்தோம்’’ என்றார் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி!
இந்து மதத்துக்குள் எத்தனை எத் தனைப் பிரிவுகள் – தெருவில் சிரிக்கும் வடகலை, தென் கலை சண்டைகள் – கொஞ்சமா நஞ்சமா?
இந்து மதக் கோயில்கள் என்று சொல் லப்படுபவைகளுள் காய்கறி படைக்கும் வகையறா… ஆடு, கோழி வெட்டிப் படைக்கும் வகையறா (Veg and Non-Vege)வுக்கும் பஞ்சமில்லை.
ஒன்று மட்டும் உறுதி! மாற்றம் என்பதுதான் மாறாதது! அந்த வகையிலே குறிப்பிட்ட ஜாதியார் தான் அர்ச்சகர் என்பது முதல் கோயிலுக்குள் மேல் உடையணிந்து செல்வதா கூடாதா என்பது உள்ளிட்ட எல்லாமே நிலை யானவையல்ல! மாறுதலுக்கு உட்பட்ட வைதான் என்பதற்கான அடையாளம்தான் கேரள மாநிலத்தில் வெளி வந்துள்ள அறிவிப்பாகும்.
அடுத்த பரிமாணம் ‘கோயிலாவது கொழுக் கட்டையாவது’ என்ற எண்ண மலர்ச்சியே!