நெல்லை கங்கைகொண்டான் சுற்றுவட்டாரத்தில் உள்ள குக்கிரா மத்தில் உயர்ஜாதி தாத்தாவிற்கும், பேரனுக்கும் இடையே நடந்த உரையாடல்
பேரன்: தாத்தா வடக்குத்தெருவில் கீழக்கடைசி வீட்டில் உள்ள சுப்பையாவின் பேரன் தான் இப்போ எங்களுக்கு மேனேஜராக வந்துள்ளார்.
தாத்தா: யாரு நம்ம தோட்டத்தில் மாடுகளை கவனித்துக்கொண்டு காலை மாலை வரப்பில் புல் பிடுங்கிப் போட்டு, இரவில் சோறு வாங்கிச்செல்லும் சுப்பையாவின் பேரனா?
*********
ஒரு காலத்தில் நெல்லையின் வடக்குப் பகுதியில், எப்போதும் ஜாதிய மோதல்கள் இருந்து கொண்டே இருக்கும் என்று பெய ரெடுத்த பகுதி இன்று –
கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டையால் பொரு ளாதாரச் சமநிலையோடு சமத்துவம் பேணும் பூமியாக மாறிவிட்டது.
15 ஆண்டுகளுக்கு முன்பு இப்ப டித்தான் திருநெல்வேலி குறித்த தலைப்புச் செய்திகள் வந்தது
ஆனால், இன்று!
நாள்தோறும் படித்த பட்டதாரி களுக்கு சில சில நிமிடப் பய ணங்களிலேயே கல்விக்கு ஏற்ற வேலைகள். ‘‘கைநிறைய சம்பளத் தோடு வேலை தயார்‘‘ என்ற நாளிதழ்கள் விளம்பரங்களால் நிறைந்துள்ளது
கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளர்ச்சி ஒரு மாவட்டத்தையே வளர்ச்சியின் பாதைக்குத் திருப்பி விட்டது
வன்முறைக்களமாக இருந்த திருநெல்வேலியில் வடக்கு பகுதி இன்று எங்கு திரும்பினும் சிறுதொழில் உற்பத்தி கூடங்களால் நிரம்பி வழிகிறது. இங்கு உற்பத்தி செயப்படும் பொருட்களை வாங்க சிப்காட் பெரு நிறுவனங்கள் முன்பணம் கொடுத்திட தயாராக நிற்கிறது.