நன்கொடை

0 Min Read

மேனாள் வடாற்காடு மாவட்ட கழகத் தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினருமான நினைவில் வாழும் ஆம்பூர் வடசேரி து.ஜெகதீசனின் 28 ஆம் ஆண்டு நினைவு நாளை (12-02-2025) யொட்டி “விடுதலை” நாளேடு வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக பாணாவரம் மா. பெரியண்ணன் வழங்கியுள்ளார். நன்றி!

– – – – –

நன்கொடை

திருவண்ணாமலை மாவட்டம், எஸ்.நாவல்பாக்கம் ஊரைச் சார்ந்த குமரேசன்-புவனேஸ்வரி ஆகியோரின் மகள் சங்கவியின் மூன்றாம் ஆண்டு பிறந்தநாள் (10.2.2025) மகிழ்வாக ரூ.2000 நன்கொடையாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கினர். வாழ்த்துகள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *