கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 10.2.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தேசிய கல்விக் கொள்கையையும், அதன் வழி மும்மொழிக் கொள்கையையும் திணிப்பதை நிராகரித்த காரணத்துக்காக, தமிழ்நாட்டு மாணவர் களுக்குரிய ரூ.2,152 கோடி நிதியை பறித்து, பிற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளித்துள்ளது. ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.
* நீதித்துறையில் இட ஒதுக்கீடு: தனிநபர் மசோதா கொண்டு வந்தார் திமுக எம்.பி. வில்சன்.
* திருப்பரங்குன்றத்தில் மத ரீதியான பிரச்சினையை உருவாக்க பாஜக முயற்சி: திமுக கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங்-குக்கு கல்தா; வன்முறையை தூண்டும் வகையில் பைரன் சிங் பேசிய ஒலிப்பதிவு குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் மணிப்பூர் முதலமைச்சர் பதவியில் இருந்து பைரன் சிங் விலகிட பாஜக தலைமை கட்டளை.

* பைரன் சிங் பதவி விலகல் போதாது; பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல வேண்டும். வன்முறைக் காடாகத் திகழும் அம்மாநிலத்தை சரி செய்திடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், காங்கிரஸ் வலியுறுத்தல்.

* ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மோடி அரசின் திட்டம், ஒரே கட்சி, ஒரே தலைவர் என்பதை நோக்கி நாட்டை நகர்த்தும். மாநில உரிமைகளை மோடி அரசு பறிக்கிறது, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் குற்றச்சாட்டு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அரசமைப்புச் சட்டம், ஜனநாயகத்தை பலவீனப் படுத்த ஒன்றிய அரசு அனைத்தையும் செய்கிறது, பிரியங்கா காந்தி, எம்.பி. கண்டனம்.

டெக்கான் ஹெரால்ட்:

* மணமகன் கடன் அதிகம் வாங்கி உள்ளார்; நிதி ரீதியாக நிலையானவர் அல்ல. வங்கிக் கடன் பெறுவதற்கான சிபில் (CIBIL) மதிப்பெண் குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி, திருமணத்தை ரத்து செய்தனர் மணமகள் குடும்பத்தினர். இந்த சம்பவம் மகாராட்டிரா முர்திசாபூரில் நடந்துள்ளது.

.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *