பெரியார் விடுக்கும் வினா! (1562)

viduthalai
1 Min Read

யார் ஒருவர் மக்கள் நன்மைக்குப் பாடுபடுபவராகவும், ஒழுக்கத்தில் சிறந்து தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டும் விளங்குகிறாரோ அவர் மற்ற மக்கள் யாவரும் அப்பண்புகளைப் பின்பற்றுவதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். அப்பேர்பட்டவரை மக்கள் உணரும்படிச் செய்ய வேண்டும். அவரின் உயரிய பண்புகளையும், சேவைகளையும் மற்ற மக்களும் பின்பற்றி நடக்கும் வண்ணம் செய்ய வேண்டும். அதற்கென்று அவரின் குணங்களை மக்கள் பார்த்துத் தமது வாழ்க்கையில் பின்பற்றி வந்த தகாத காரியங்களை விட்டொழித்துத் திருந்தி வாழ வேண்டும். அதற்காக இவரைப் பார்த்தவுடன் அவரின் உயர்ந்த பண்புகள் யாவும் மனதில் உதித்து அதனைப் பின்பற்றச் செய்ய வேண்டும் என்பதற்காகவே படத்திறப்பும், சிலை சிறப்பும் ஆன நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டுமேயன்றி வெற்று விளம்பர வெளிச்சத்திற்கு நடத்தப்படலாமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *