அய்யா வழியில் அறிவுப்பணி தொடர்வோம் – கருத்தரங்கம்

1 Min Read

கொரட்டூர், பிப். 10- “அய்யா வழியில் அறிவுப் பணி தொடர்வோம்” தலைப்பில் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் சார்பில் 459ஆவது வார நிகழ்வாக 9.2.2025 அன்று இரவு 7 மணிக்கு கொரட்டூர், தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைகழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வர வேற்புரையுடன் ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன் முன்னிலையில், மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு தலைமையில் மேனாள் நகர மன்ற உறுப்பினர் சு.தேவேந்திரகுமார்,வி.சி.க.தொழிலாளர் வி டுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் தே.குணாபாரதி ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்வில் இரா.பிச்சைமணி, சுமதி மணி, சரத்குமார், சசிகுமார், சு.சிவகுமார், வழக்குரைஞர் பன்னீர்செல்வம், புஷ்பா பன்னீர்செல்வம், அருள் விழியன், கார்த்தி, தோழர் மார்க்ஸ், கருப்பசாமி, ஆறுமுகம், மணவாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக சி.ஜெயந்தி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *