கரூர், பிப். 10- கரூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்தரை யாடல் கூட்டம் கரூர் காந்திகிராமம் குமார் தையலகத்தில் 7.2.2025 அன்று மாலை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ம. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் செல்வம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாநில இளைஞர் அணி செயலாளர் நாத்திக.பொன்முடி இளைஞர் அணியை கட்டமைத்தல் குறித்தும், இளைஞர் அணி செயல் திட்டங்கள், புதிய இளைஞர் அணி நிர்வாகிகளை நியமித்தல், தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இரங்கல் தீர்மானம் கரூர் க. பரமத்தி ஒன்றிய கழகத் தலைவர் கா தமிழ் சொக்கனின் மறைவிற்கு கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கழக இளைஞரணி சார்பில் கரூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, அனைத்து ஊராட்சி கிளைக் கழகங்கள் முழுவதும் கழக இலட்சிய கொடி ஏற்றுவதும், தொடர்ச்சியாக தெருமுனை பிரச்சாரம் திண்ணைப் பிரச்சாரம் துண்டறிக்கை தகவல் பலகை அமைத்தல் என தீர்மானிக்கப்படுகிறது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலை நாளிதழை கொண்டு சேர்க்கும் விதமாக அதிக அளவில் சந்தாக்களை வழங்கவும், உலகம் பெரியார் மய்யம் பெரியாரை உலகம் மய்யம், என்ற சொல் லுக்கு இணங்க பெரியார் உலகத்திற்கு கழக இளைஞர் அணி சார்பில் அதிக அளவில் நிதி வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.
பிப்ரவரி 15இல் சிதம்பரத்தில் நடை பெற இருக்கும் தலைமை பொதுக்குழு கூட்ட தீர்மானத்தினை விலக்கி கரூர் மாவட்டம் முழுவதும் தீர்மான விளக்க பிரச்சாரக் கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் அறிவுறுத்தலின்படி தலைமைக் கழக அறிவிப்புக்கு இணங்க புதிய இளைஞர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்படும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கழக தலைவர் ப. குமாரசாமி, மாவட்ட காப்பாளர் வே. ராஜு, மாவட்டச் செயலாளர் ம. காளிமுத்து, மாவட்டத் துணைச் செயலாளர் தே. அலெக்சாண்டர், மாவட்ட கலை இலக்கிய அணி பேரவை செயலாளர் மா. ராமசாமி, மானமிகு ம. பொம்மன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் கவிஞர் கவியருட்செல்வன், சு. பழனிச்சாமி கரூர் ஒன்றிய தலைவர், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் இரா. பெருமாள், தாந்தோணி ஒன்றிய செயலாளர் வெங்ககல்பட்டி மா கணேசன், நகர இளைஞரணி தலைவர் காந்திகிராமம் ராஜா, தொழிலாளர் அணி செயலாளர் இரா. கார்த்தி, இளைஞர் அணி துணைச் செயலாளர் நைஸ் சபாபதி, மாணவர் கழக கவின், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் காந்தி கிராமம் குமார் நன்றி உரை கூறினார்.