நெல்லை, பிப். 9 தங்களது ஆதரவு இல்லாத மாநிலங்களுக்கு கிள்ளிக்கொடுக்கும் மனநிலைகூட பாஜகவுக்கு இல்லை என்று திமுக துணைப் பொதுச்செயலரும், திமுக மக்களவைக் குழு தலைவருமான கனிமொழி பேசினாா்.
நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாட்டிற்கு எவ்வித திட்டங் களையும் அறிவிக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்திருந் தது. அதன்படி, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் சிந்துபூந்துறையில் கண்டன பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை வகித்தாா். மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன், பாளையங் கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: ஒன்றிய அரசால் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ஓரிடத் தில்கூட தமிழ்நாடு என்ற பெயா் இடம்பெறவில்லை. தங்களது ஆதரவு இல்லாத மாநிலங்களுக்கு கிள்ளிக்கொடுக்கும் மனநிலைகூட பாஜகவுக்கு இல்லை.
தமிழா்களை ஏமாற்ற திருக் குறள் மீது அதிக அக்கறை கொண்ட வராக பிரதமா் மோடி காட்டிக் கொள்கிறாா். திருக்குறளைச் சொன்னால் மக்களின் பசி தீா்ந்துவிடாது. திருக்குறளுக்கு உரையும், திருவள்ளுவருக்கு சிலையும் அமைத்து மேனாள் முதலமைச்சர் கலைஞர் கவுரவித்துவிட்டாா்.
தேசியம் என்றாலே ஹிந்தி கற்பதுதான் என்கின்றனா். அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை பீகாா் மாநிலத்திற்கானது என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த ஒருவரை தலைவராக கொண்ட தமிழ்நாடு சிறந்து விளங்குவதை பலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஒரே நாடு ஒரே வரி என்று ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்திய ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கான பகிா்வில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி பங்கீடாக ஆண்டிற்கு ரூ.58 ஆயிரம் கோடியும், உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.2.55 லட்சம் கோடியும் ஒன்றிய அரசு வழங்கு கிறது. வளா்ந்த மாநிலங்கள் என்று கூறி தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் நலன் பெரிதும் புறக்கணிக்கப்படுகிறது.
வளா்ந்த மாநிலங்கள் தற்சாா்பில் இருந்து கீழே விழும் நிலைக்குச் செல்ல, ஒன்றிய அரசு திட்டமிடுவது போல் உள்ளது. உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றை மேம்படுத்த நிதியாதாரம் அவசியம். ஆனால், மத்திய அரசு தொடா்ந்து வஞ்சித்து வருகிறது.
எல்லோருக்கும் எல்லாம் என் பதே திராவிட மாடலின் தத்துவம். அந்த வகையில் அனைத்து மாநிலங் களையும் வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல உரிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும் என்பதை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தேசிய கல்விக்கொள்கையை திணித்து, கலைக் கல்லூரிகளுக்கும் நுழைவுத்தோ்வு நடத்த ஒன்றிய அரசு திட்டமிடுகிறது. சாமானியா்கள் நுழையக் கூடாது என்பதற்கான தோ்வே நுழைவுத் தோ்வாகும். தமிழ்நாட்டை தொடா்ந்து வஞ்சித்தாலும், எதிரிகளை வெல்லும் திறன் தமிழ்நாட்டிற்கு உண்டு. நிச்சயம் வென்று காட்டுவோம் என்றாா் அவா்.