விருத்தாசலம் கழக மாவட்டத் தோழர்கள் இல்லங்களில் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கொடி ஏற்றினார்

viduthalai
1 Min Read

விருத்தாசலம், பிப். 9- விருத்தாசலம் கழக மாவட்டத் தோழர்கள் இல்லங்களில் சனிக்கிழமை திராவிடர் கழக இலட்சியக்கொடி ஏற்றப்பட்டது..

விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத்தோழர்கள் இல்லங்களில் கழகத்தின் இலட்சியக் கொடி ஏற்றுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள மாவட்ட தலைவர் த.சீ. இளந்திரையன் இல்லம், சின்னவடவாடி கிராமத்தில் உள்ள மாவட்ட செயலாளர் ப.வெற்றிச்செல்வன், எ.வடக்குப்பம் கிராமத்தில் உள்ள மாவட்ட இளைஞரணி தலைவர் செ.சிம்பரசன் ஆகியோர் இல்லங்களில் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கழகத்தின் லட்சியக்கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் த.சீ. இளந்திரையன் தலைமை வகித்தார்., காப்பாளர் அ.இளங்கோவன், மாவட்ட செயலாளர் ப.வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் கி.பாலமுருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் செ. சிலம்பரசன், செ.ஜெகன்ராஜ், அறிவழகன், உஷா, தமயந்தி, பொழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *