சிங்கம்புணரி, பிப். 9- சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரியில் மாலை 6 மணிக்கு பெரியார் பிறவாமலிருந்தால் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம் தலைமை வகித்தார். நகரசெயலாளர் வெ.இராசேந்திரன் வரவேற்றார். கழக காப்பாளர் வழக்குரைஞர் ச. இன்பநாதன் மாவட்டத் துணைத் தலைவர் ஜெ. தனபாலன் மாவட்ட துணைச் செயலாளர் கவிஞர் ஆ.தங்கராசன், மாவட்ட தொழிலாளர் பேரவை செயலாளர் மு. தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இராம. அருணகிரி, மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்குரைஞர் அ.கணேசன் ஆகியோர் பங்கேற்று தந்தை பெரியாரின்பண்பு நலன்களையும், அனத்துமக்களும் பெற்றிருக்கும் மான வாழ்வையும் , தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 92 வயதிலும் அருந்தொண்டாற்றி வருவதையும்விளக்கி கருத்துரை யாற்றினார்கள். நிறைவாக பெரியார் பிறவாமலிருந்தால் என்ற தலைப்பில் கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் பேசுகையில், அறிவாசான் தந்தைபெரியாரின் பேருழைப்பால் ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்றிருக்கும் பயன் களையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா உழைப்பால் பெரியார் உலகமயமாகிக் கொண்டிருக்கும் சிறப்பினையும். சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஆட்சியை தமிழர் தலைவர் ஆசிரியர் வழி நடத்துகிறார் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத பார்ப்பன அடிவருடிகள் தந்தை பெரியாரை இழிபடுத்த முனைகிறார்கள்.
தந்தை பெரியாரின் பெரும் புகழை எவராலும் மறைத்திடமுடியாது அவர்களின் சதிச்செயல்களை தூள்தூளாக்குவோம் என எழுச்சி யுரையாற்றினார்.
திமுக பொறுப்பாளர்கள் சேர்மன் அம்பலமுத்து, சேகர், குடோன்மணி, பூமிநாதன், இரகுராமன், செல்வகுமார், காங்கிரஸ் பேச்சாளர் சிங்கை தர்மன், காதர் மைதீன், விசிக ஒன்றிய செயலாளர் கக்கன்காளிதாசு, வழக்குரைஞர் கா.கற்பசோதி, கா.தர்மபியா மே 17 இயக்கம்பா. பாண்டியராசன், சமூக நீதிப் பேரவை அழகு, பெரியார் சிந்தனையாளர் முனைவர் எஸ்.எஸ்.மணியன், கிருக்காங்கோட்டை கழக தலைவர் இல.அன்புச்செல்வன், மாவட்ட ப.க. செயலாளர் சு.செல்லமுத்து, புதுக்கோட்டை மாவட்ட துணைச்செயலாளர் வெ.ஆசைத்தம்பி, பொன்னமரா வதி கழக தலைவர் மாவளி ஆகி யோர் பங்கேற்று சிறப்பித்தனர்.