ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

Viduthalai
1 Min Read

தஞ்சாவூர், ஜூலை 15 – ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். தஞ்சை அரண்மனை வளா கத்தில் புத்தக திருவிழாவை நேற்று (14.7.2023) காலை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

டெட் தேர்வு, போட்டித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவை தொடர்பாக ஏறத்தாழ 20 மணி நேரம் ஆசிரியர் சங்கத்தின் சார்பாக வந்தவர்களிடம் பேசி னோம். ஒவ்வொருவரும் கோரிக்கைகள் வைத் துள்ளனர். அதில் நியாயமான கோரிக்கைகளும் உள்ளன. கருணை அடிப்படையில் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது.

மிக விரைவில் நிதித்துறை அமைச்சர், நிதித்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாள ருடன் ஆசிரியர் சங்கங்கள் மூலமாக வந்த கோரிக்கைகள் குறித்து பேச உள்ளோம். அதில் எந்தெந்த கோரிக்கைகள் உடனடியாக செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்ய போகிறோம்.

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, முதல் முறையாக ஒவ்வொரு பள்ளியிலும் 20 நிமிடங்கள் பள்ளி நூலகத்துக்கு மாணவர்கள் செல்லும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு மாணவர்கள் விரும்புகிற புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம். இதன் மூலம் பள்ளி சார்ந்த தமிழ் மன்றங்கள், மற்ற மன்றங்கள் மூலமாக நடைபெறுகிற கட்டுரை, கவிதைப் போட்டிகளில் பங்கு பெறவும், மாநில அளவில் பரிசு பெறும் வகையிலும் திட்டத்தை செயல்படுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *