மருத்துவக் கல்விக்கு புதிய இயக்குநர்

1 Min Read

சென்னை, நவ. 15- தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர் கடந்த அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், விருதுநகர் மருத்துவக் கல்லூரி முதல்வ ராக உள்ள டாக்டர் ஜெ.சங்குமணியை பதவி உயர்வு அடிப்படையில் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி நேற்று (14.11.2023) வெளியிட்டார்.

மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ஜெ.சங்குமணி 33 ஆண்டுகள் மக்கள் நல்வாழ்வுத் துறையின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். இவர் முதன் முதலாக தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரி யாக பணியில் சேர்ந்தார். பின்னர், பல்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு திறம்பட பணியாற்றி வந்தார். இதற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மேலும், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் செனட் உறுப் பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *