வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி பி.எஸ்.என்.எல்.-ன் 3 திட்டங்கள் நிறுத்தம்!

viduthalai
2 Min Read

சென்னை, பிப். 8- பிஎஸ் என்எல் நிறுவனம், 3 முக்கியமான ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்த உள்ளது. வாடிக்கையாளர்கள் பலர் பி.எஸ்.என்.எல்.க்கு மாறி வந்த நிலையில், குறைந்த விலை கொண்ட 3 திட்டங்கள் நிறுத்தப்பட உள்ளது வாடிக்கை யாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் அய்டியா ஆகிய டெலிகாம் நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிரடியாக ரீசார்ஜ் கட்ட ணங்களை உயர்த்தின. தனியார் நிறுவனங்களின் அனைத்து ப்ரீ பெய்டு திட்டங்களின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டதால் மக்கள் வெகுவாக அதிருப்தி அடைந்தனர். அதேசமயம் அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். குறைந்த விலை யில் கலக்கலான திட்டங்களை வழங்கி வருகிறது.

தனியார் டெலிகாம் நிறு வனங்களை விட மிகக் குறைவான விலையில் அதிக பலன்களை தரும் ப்ரீபெய்டு திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி வருவதால் அலைபேசி பயனர்கள் மத்தியில் பி.எஸ்.என்.எல்லுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. பலர் தங்களுடைய அலைபேசி எண்களை பிஎஸ் என்எல்லுக்கு மாற்ற ஆர்வம் காட்டினர்.
இதன் காரணமாக, பி.எஸ்.என்.எல்லும் தமது சேவையை சிறப்பாக வழங்க திட்டமிட்டு வருகிறது. சமீபத்தில், பிஎஸ்என்எல் தமது வாடிக்கையாளர்களுக்கான நெட்வொர்க் இணைப்பை மேம்படுத்த 65,000 க்கும் மேற்பட்ட 4ஜி அலைபேசி கோபுரங்களை நிறுவியுள்ளது.

3 திட்டங்கள் நிறுத்தம்

இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம், 3 முக்கியமான திட்டங்களை நிறுத்த உள்ளது. நீண்ட வேலிடிட்டி கொண்ட குறைந்த விலையிலான திட்டங் களை வரும் பிப்ரவரி 10 ஆம் தேதியோடு ரூ.201, ரூ.797 மற்றும் ரூ.2,999 ஆகிய விலை கொண்ட திட்டங்களை நிறுத்த உள்ளது

பிஎஸ்என்எல்.

இதுதொடர்பாக, வாடிக் கையாளர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இருந்து குறுஞ் செய்திகளைப் பெற்றுள்ளனர். “201, 797, மற்றும் 2999 பிளான் வவுச்சர்கள் 10.02.2025 முதல் நிறுத்தப்படும். மற்ற வவுச்சர்கள் பற்றிய விவரங்களுக்கு, தயவு செய்து செல்ஃப்கேர் செயலியைப் பதிவிறக்கம் செய்து உங்கள் ரீசார்ஜில் 2 சதவீத தள்ளுபடியைப் பெறுங்கள்” என குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *