தஞ்சை வழக்குரைஞர் சி.அமர்சிங்கின் குடும்ப விழா, தஞ்சை மாநகரஇணைச்செயலாளர் இரா.வீரக்குமார்-அனுராதா மணநாள்: தோழர்கள் வாழ்த்து

1 Min Read

7.2.2025 காலை 10 மணி அளவில் தஞ்சை பெரியார் இல்லத்தில் தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்குக்கு 79 ஆவது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கேக், இனிப்புகள் வழங்கி பயனாடை அணிவித்தனர். காலை 11 மணி அளவில் கழக தஞ்சை மாநகர இணைச் செயலாளர் இரா. வீரக்குமார்-அனுராதா ஆகியோரின் 13ஆவது மணநாள் வாழ்த்து தெரிவித்து அவர்களது இல்லத்தில், இனிப்புகள் வழங்கி பயனாடை அணிவித்தனர்.
திமுக தஞ்சை மாநகர மேனாள் துணைச் செயலாளர் இரா.ஜெயபால் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், காப்பாளர் மு. அய்யனார் மாவட்ட துணைத் தலைவர் பா.நரேந்திரன் பகுத்தறிவாளர்கழக ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், பெரியார் சமூக காப்பு அணி இயக்குனர் தே.பொய்யாமொழி, தஞ்சை மாநகர செயலாளர் செ. தமிழ்ச்செல்வன், மாநகர இணைச் செயலாளர் இரா.வீரகுமார், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அ.இராமலிங்கம், குடும்ப விளக்கு நலநிதி நிர்வாகி பா.வேணுகோபால், மாநகரத் துணைத் தலைவர் அ.டேவிட், புதிய பேருந்து நிலைய பகுதிதலைவர் சாமி.கலைச்செல்வன், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் கா.அரங்கராசன், கீழவாசல் பகுதி செயலாளர் பெ.கணேசன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட இணை செயலாளர் ஆ.லட்சுமணன், கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன்,கவிஞர் பகுத்தறிவுதாசன், பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்ட செயலாளர் செ.சிகாமணி பூதலூர் ஒன்றிய துணை செயலாளர் ப. விஜயகுமார், பிள்ளையார்பட்டி முருகேசன்,கோகிலாசிகாமணி, ஆகியோர் இந்நிகழ்வுகளில் பங்கேற்று பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். தஞ்சை மேனாள் நகர் மன்ற தலைவரும் வீரக்குமாரின் மாமியாருமான ஜெ.தேன்மொழி மாவட்ட மகளிர் அணி தலைவர் கலைச்செல்வி, மகன் -பெரியார்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *