இ.கே. அகாடமி: கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்தார்

viduthalai
2 Min Read

சேலம், பிப். 8- திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொதுக்குழு உறுப்பினர் கை முகிலன்- மு. செல்வமணி வாழ்விணையர்களின் மகன் மு.அறிவுச்செல்வம் சேலத்தில் புதிதாக துவங்கியுள்ள அகாடமியை திறந்து வைத்தார்.

ரயில் நிலையத்தில் வரவேற்பு

சேலத்திற்கு வருகை புரிந்த கழகப் பொதுச் செயலாளருக்கு, சேலம் ரயில் நிலையத்தில் மாலை 05:50 மணிக்கு, மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் தலைமையில், மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு, மாவட்டச் செயலாளர் சி பூபதி முன்னிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தோழர்கள் பொதுச்செயலாளருக்கு பயனாடை அணிவித்தும், வாழ்த்து முழக்கங்களை எழுப்பியும் தம் அன்பை வெளிப்படுத்தினர்.

பெரியார் உலகத்திற்கு நன்கொடை

புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள, வீரபாண்டியார் நகரில் அமைந் துள்ள இ.கே. அகாடமியை கழகப் பொதுச் செயலாளர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இ.கே. அகாடமி சார்பில் பொதுச் செயலாளருக்கு, மேட்டூர் மாவட்ட தலைவர் கா. நா. பாலு- கா. அறிவுமணி வாழ்விணையர்கள் வெள்ளி டம்ளர் நினைவுப் பரிசு வழங்கி மகிழ்ந்தனர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன்-1000, மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு – 1000, பொதுக்குழு உறுப் பினர் க.கமலம்-500 பெரியார் உலகத்திற்கு பொதுச்செயலாளர் அவர்களிடம் நன்கொடை வழங்கி மகிழ்ந்தனர்.

அனைவருக்கும் இ.கே. அகாடமி சார்பில் தேநீர் விருந்து அளித்து உபசரிக் கப்பட்டது. நிகழ்வில் கழகத் தோழர்களும் உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்ந்து, இரவு 07:30 மணிக்கு சேலம் மாவட்ட காப்பாளர் கி. ஜவகரை, அவரின் இல்லத்திற்கு கழகத் தோழர்களுடன் சென்று, பொதுச்செயலாளர் நலம் விசாரித்தார்.

பங்கேற்றோர்

மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் தமிழ் பிரபாகரன், சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, சேலம் மாவட்ட செயலாளர் சி பூபதி, பொதுக்குழு உறுப்பினர் கை முகிலன்- செல்வமணி வாழ்விணையர், மேட்டூர் மாவட்டத் தலைவர் கா. நா. பாலு-அறிவுமணி வாழ்விணையர், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் லோகநாதன், ஆத்தூர் மாவட்டத் தலைவர் அ சுரேஷ், ஆத்தூர் மாவட்டச் செயலாளர் நீ சேகர், சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தலைவர் வழக்குரைஞர் சுரேஷ்குமார், மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.அன்புமதி, சேலம் மாவட்ட துணைச் செயலாளர் அ. இ. தமிழர் தலைவர்,அம்மாபேட்டை பகுதி தலைவர் குமாரதாசன், செயலாளர் இமயவரம்பன், சூரமங்கலம் பகுதி தலைவர் பழ பரமசிவம்,மருத்துவர் சலீம், பொதுக்குழு உறுப்பினர் கமலம், மேனாள் சேலம் மாவட்ட தலைவர் அ. ச. இளவழகன், மேனாள் சேலம் மாவட்ட செயலாளர் பா வைரம், மேனாள் ஆத்தூர் மாவட்டத் தலைவர் விடுதலைச் சந்திரன், மகளிரணி தோழியர் ராதா, மாரியப்பன், உடையாபட்டி சக்திவேல், கஞ்சநாயக்கன்பட்டி தோழர் சிறீதர், பொறியாளர் பாஸ்கர், வழக்குரைஞர் செல்வகுமார் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *