அமுதம் அங்காடி நியாய விலைக் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி, துவரம் பருப்பு விற்பனை தொடக்கம்

Viduthalai
2 Min Read

அரசியல்

சென்னை, ஜூலை 15 –  தமிழ் நாட்டில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த 928 கோடி ரூபாய் மதிப்பில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் செய் யப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிச் சந்தையில் விலைவாசி உயர் வினைக் கட்டுப்படுத்தவும், மக் களுக்கு ஊட்டச்சத்து கிடைத் திடவும் கலைஞரால் கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் குடும்ப அட்டை தாரர்களுக்கு விநியோகம் செய்யப் பட்டு வருகிறது.

முதலமைச்சர், 10.07.2023 அன்று அமைச்சர்கள் மற்றும் அலுவலர் களுடன் விலைவாசி உயர்வு தொடர்பாக நடத்திய ஆய்வுக் கூட்டத்தினைத் தொடர்ந்து என் தலைமையிலும் தலைமைச் செய லாளர் முன்னிலையிலும் விலைக் கட்டுப்பாட்டு குழுக் கூட்டம் 11.07.2023 அன்று நடைபெற்றது.

விலைவாசி உயர்வினைக் கட் டுப்படுத்தும் விதமாக, உடனடி யாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 2023 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்குத் தேவையான 40,000 மெ.டன் துவரம் பருப்பு 464.79 கோடி ரூபாய்க்கும் 2023 ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம் பர் மாதங்களுக்குத் தேவையான 5.10 கோடி பாமாயில் பாக் கெட்டுகள் 463.48 கோடி ரூபாய்க்கும் மொத்தம் ரூ.928.27 கோடி மதிப்பில் கொள் முதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டலக் கிடங்குகளிலும் இறக் கம் செய்யப்பட்டு வருகின்றன. 

அந்தக் கிடங்குகளிலிருந்து நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குத் தங்கு தடையின்றி விநியோகம் செய்யப் பட்டு வருகிறது.

தக்காளி விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்கப்படாம லிருக்க நியாயவிலைக் கடைகள் மூலமாக தக்காளி கிலோ ஒன்றிற்கு 60 ரூபாய் விலையில் வழங்கப் பட்டுவருகிறது.

சென்னையில் ஏழு அமுதம் அங்காடிகளிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் ஏழு நியாயவிலைக் கடைகளிலும் தக்காளி கிலோ ஒன்றிற்கு 60 ரூபாய்க்கும் துவரம் பருப்பு அரை கிலோ 75 ரூபாய்க்கும் உளுந்தம் பருப்பு அரை கிலோ 60 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. இதற்குத் தமிழ்நாடு அரசால் பரா மரிக்கப்பட்டு வரும் விலைக் கட்டுப்பாட்டு நிதி பயன்படுத்தப் படுகிறது.

குடிமைப்பொருள் குற்றப் புல னாய்வுத் துறை மூலமாகவும் இன்றியமையாப் பொருள்கள் பதுக்கப்படாமலிருக்கவும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

முதலமைச்சர் விலைவாசி உயர் வால் பொதுமக்கள் பாதிக்கப்படாம லிருக்க மேற்குறிப்பிட்டவாறு அனைத்து நடவடிக்கைகளையும்  மேற்கொண்டு  வரு கிறார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *