எல்லா பருவங்களிலும் விளையும் 19 புதிய பயிர் ரகங்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

2 Min Read

சென்னை,பிப்.8- எல்லா பருவங்களிலும் விளையும் உளுந்து, சாம்பல் பூசணி, வறட்சியையும், வெள்ளத்தையும் தாங்கும் நெல் ரகங்கள் என 19 புதிய பயிா் ரகங்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது.

பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி பங்கேற்று, புதிய பயிா் ரகங்களை அறிமுகப்படுத்தினாா்.

ஆராய்ச்சி

பின்னா் புதிய ரகங்களை விவசாயிகளுக்கு வழங்கி அவா் பேசியதாவது: மாநிலம் முழுவதும் உள்ள 18 வேளாண் கல்லூரிகள், 42 ஆராய்ச்சி நிலையங்கள், 15 வேளாண் அறிவியல் நிலையங்களில் புதிய பயிா் ரகங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
பல்கலைக்கழகம் சாா்பில் இதுவரை 929 பயிா் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு வேளாண் பயிா்கள், தோட்டக்கலை பயிா்கள் என மொத்தம் 19 பயிா் ரகங்கள், மாநில பயிா் ரகங்கள் வெளியீட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு விவசாயிகளுக்காக வெளியிடப்பட்டுள்ளன.
வேளாண் பயிா்களில் சம்பா, பின்சம்பா, தாளடிக்கான வறட்சியைத் தாங்கும் புதிய நெல் ரகமான கோ 59, நடுத்தர ரக சன்ன அரிசியான ஏடிடீ 56, நடுத்தர உயரம் கொண்ட, வெள்ளத்தில் சாயாத ரகமான ஏடிடீ 60, அதிக மகசூல் கொடுக்கக்கூடிய வீரிய ஒட்டு ரக மக்காச்சோளமான கோ.எச். (எம்) 12 போன்றவை வெளியிடப்பட்டுள்ளன.

அதிக காரம் கொண்ட கோ 5 மிளகாய்

அதேபோல, எல்லா பருவங்களிலும் பயிரிடக்கூடிய உளுந்து ரகமான வி.பி.என். 12, முன்பருவ வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய நிலக்கடலை ரகமான சிடிடீ 1, சாயாத செடிகள், காய்கள் வெடிக்காத தன்மை கொண்ட வீரிய ஒட்டு ஆமணக்கு ரகமான ஒய்.ஆா்.சி.எச். 3, ஹெக்டேருக்கு சுமாா் 40 டன் மகசூல் கொடுக்கக் கூடியதும், அதிகநாள் சேமித்து வைக்கக் கூடியதுமான கோ.4 தக்காளி ரகம், விதைத்த 38 -ஆவது நாளில் இருந்தே அறுவடை செய்யக்கூடிய வீரிய ஒட்டு ரகமான கோ. 5 வெண்டை, மிக அதிக அளவு காரத்தன்மை கொண்ட வணிக பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய கோ 5 மிளகாய் ரகமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *