அறந்தாங்கி, பிப். 7- அறந்தாங்கி கழக மாவட்டத்தில் 2.2.2025 அன்று காலை 9 மணிக்கு மாவட்ட கழக தலைவர் க. மாரிமுத்து மாவட்ட செயலாளர் செகதை ச.குமார் மாவட்ட இளைஞரணி தலைவர் அ.யோவான் ஆகியோருடன் கொள்கைக் குடும்பத்தினருடன் சந்திப்பு கூட்டம் தொடங்கியது.
அத்தானி
ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சிவசாமி இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் சி.பிரபாகரன் -ஆசிரியர் சோ.சத்யா இணையர்கள் வரவேற்றுசிறப்பித்தார்கள். பிள்ளைகள் செல்லநவீனா,மகிழ்நன் இருவரும் உண்மை இதழுக்கு சந்தா வழங்கினார்கள்.
அத்தானியில் 22.2.2025 அன்று பெரியாரால் வாழ்கிறோம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய மகளிரணி தலைவராக சோ.சத்யா நியமிக்கப்பட்டார். ஒன்றிய தலைவர் பூந்தோட்டம் அ.நாகூரான் வரவேற்று விடுதலை சந்தா வழங்கினார்.
செகதாப்பட்டினம்
செகதாப்பட்டினத்தில் மாவட்டச் செயலாளர் ச.குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் அ.யோவான் இல்லங்களில் நடைபெற்ற சந்திப்பில் நாள்தோறும் பதினோரு விடுதலை செகதாப்பட்டிணம் வருகிறது என்றும்,
கட்டுமாவடி,அம்மாபட்டி ணம், கோட்டைப்பட்டிணம், ஆவுடையார் கோவில் ஆகிய ஊர்களில் கழகத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள். மணமேல்குடி ஒன்றிய மகளிர் அணி தலைவராக அ.சுவாதி நியமிக்கப்பட்டார்.
மீமிசலில் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தலைவர்மு.கார்த்தி-அ.சத்யா இணையர்கள், இரா.புதுப் பட்டிணத்தில் மா.சிவபாலன்-பழனியம்மாள் இணையர்கள் அன்பொழுக வரவேற்று மீமிசலில் பெரியார் பிறவாமலிருந்தால் என்ற தலைப்பில் கூட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்கள்.
அறந்தாங்கி
தொடர்ந்து அறந்தாங்கியில் நடைபெற்ற சந்திப்பில் நகர செயலாளர் வழக்கறிஞர் இரா.குமார், பாலகம் செல்வம், கவியரசன் ஆகியோர் பங்கு பெற்றார்கள். சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நெய்வத்தளியில் மாவட்ட ப.க.செயலாளர் கோ.வீரையா இல்லத்தில்அய்ந்து குடும்பத்தினரின் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ப.க.செயலாளர் கோ.வீரையா-ஆசிரியர் மாலதி ஆகியோருக்கு வாழ்வியல் சிந்தனைகள் நூல் வழங்கி மணநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பெரியார் பெருந்தொண்டர் த.சவுந்தார்ராசன் இணையர் ஞானாம்பாள் கிளைக்கழக தலைவராக நியமிக்கப்பட்டார்.
மாவட்ட மகளிர் பாசறை தலைவராக மா.மாலதி, மாவட்ட மாணவர் கழக செயலாளராக கு.சிந்தனைச்செல்வன், ஒன்றிய பள்ளி மாணவர்கழக தலைவராக மா.வீ.செம்மகிழ்நன் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். மாவட்டக்கழக துணைச்செயலாளர் ப.மகாராசா, மாவட்ட மாணவர் கழக செயலாளர் கு.சிந்தனைச்செல்வன் ஆகியோர் பெரியார் பிஞ்சு சந்தாவும், மாவட்ட ப.க.செயலாளர் கோ.வீரையா விடுதலை சந்தாவும் வழங்கினார்கள். நிகழ்வில் பொறியாளர் சவு.திராவிடநலன்-ரூபி, ஒன்றியத்தலைவர் த.குமார் ஆகியோர் பங்கேற்றார்கள்.
சேந்தன்குடி
கோவையில் தொழிலகம் நடத்தும் செ.முகிலன்-அன்புச்செல்வி இணையர்கள் விடுதலை, பெரியார் பிஞ்சு இதழ்களுக்கு சந்தாவழங்கினார்கள்.
நிகழ்வில் ஆயிங்குடி கா.திராவிடச் செல்வி குடும்பத்தினர் பங்கேற்றார்கள். கீரமங்கலத்தில் செ.இளஞ்சேரன், மாங்காட்டில் கழகப்பேச்சாளர் சுப.மணியரசன் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பில் கீரமங்கலம், மாங்காடு ஆகிய ஊர்களில் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
குப்பக்குடியில் நடத்துனர் ம.முருகேசன், மாவட்டக் கழக துணைத்தலைவர் இரா.இளங்கோ இல்லங்களில் நடைபெற்ற சந்திப்பில் கல்வி அலுவலர் கருணாகரன் பங்கேற்றார். உண்மை படித்து இயக்கத்தில் இணைந்த நடத்துநர் ம.முருகேசன் உண்மை இதழுக்கு சந்தா வழங்கினார்.
தொடர்ந்து புதுக்கோட்டைவிடுதியில் சுயமரியாதைச்சுடரொளி பெ.இராவணன் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் இரா.மேகநாதன்-சிவரஞ்சினி இணையர்கள் உண்மை சந்தா வழங்கியதுடன் 14.2.2025 அன்றுபெ.இராவணன் அவர்களின்படத்திறப்பு தேதியளித்து வருகைதரும் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.
ஆலங்குடி
ஆலங்குடியில் நகர செயலாளர் நெடுஞ்செழியன் -கீதா இணையர்கள் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் ஆலங்குடி வருகைதரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. நிறைவாக கறம்பக்குடியில் பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநில அமைப்பாளர் க.முத்து இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் பெரியாரால் வாழ்கிறோம் என்ற தலைப்பில் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
காலை ஒன்பது மணிக்கு தொடங்கி இரவு ஒன்பது மணிவரை கழக குடும்பங்களை சந்திக்கும் வாய்ப்பினை உருவாக்கித் தந்த மாவட்டத்தலைவர் க.மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் செகதை.ச.குமார்,உடன் பங்கேற்ற மாவட்ட இளைஞரணி தலைவர் அ.யோவான் ஆகியோருக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.