கோவையில் 100 வார்டுகளிலும் மாதம் 5 தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள்

Viduthalai
1 Min Read

மாநகர கழகக் கலந்துரையாடலில் முடிவு

கோவை, பிப்.6 கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் மாதம் 5 தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது என கோவை மாநகர கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.
கோவை மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் புலியகுளம் பகுதியில் 28.01.2025 அன்று மாலை 6.30 மணி அளவில் மாநகரத் தலைவர் தி.க செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.
மாநகர செயலாளர் புலியகுளம்.கா. வீரமணி வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் , பொதுக்குழு உறுப்பினர் பழ.அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். புலியகுளம் பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கணபதி பகுதி தலைவர் கவி.கிருஷ்ணன், பீளமேடு பகுதி செயலாளர்மா.ரமேஷ், பகுத்தறிவாளர் கழகம் ஆடிட்டர் ஆனந்தராஜ், குறிச்சி பகுதி ராஜா, குரு, ஆவின் சுப்பையா, பகலவன் ஆகியோர் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.

தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கோவை மாவட்ட கழக காப்பா ளர் இரா.ரங்கநாயகி அம்மாள், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் கு.தேவிகாவின் தாயார் முத்துலட்சுமி, குறிச்சி பகுதிப் பொறுப்பாளர் ர.முத்து கணேசனின் தந்தை ரகுநாதன் ஆகியோரது மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் மாதம் 5 தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது.
தந்தை பெரியார் அவர்களை குறித்து தொடர்ச்சியாக அவதூறுகளை பரப்பி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை இக் கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *