விருதுநகரில் பொன்மேனி அரங்கம் திறப்பு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கல்

2 Min Read

விருதுநகர், பிப். 6- விருதுநகர், பேராலி சாலை, கருப்பசாமி நகரில், விருதுநகர் மாவட்டத் தலைவர் கா.நல்லதம்பி – பொன்மேனி ராஜயோகம் இணையரது பொன்மேனி அரங்கம் திறப்பு விழா 01.02.2025 சனி காலை 10 மணியளவில், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ந.ஆனந்தம் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் கா.நல்லதம்பி வரவேற் புரையாற்றினார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் அரங்கினை திறந்து வைத்து, இணையருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்து வாழ்த்துரை வழங்கினார்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் வா.நேரு தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
இராசபாளையம் மாவட்ட ப.க. தலைவரும், சாத்தூர் நகர்மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக், புரட்சியாளர் அம்பேத்கர் படத்தினை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

விருதுநகர் சி.பி.அய். பொறுப்பாளர் தோழர் பாலமுருகன் புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் படத்தினை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். நகர தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர். எஸ்.தனபாலன், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர்.எஸ்.ஆர்.மாதவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பரிசளிப்பு

விருதுநகர் மாவட்ட ப.க. அமைப்பாளர் மா.பாரத் திருவள்ளுவர் படம் பரிசளித்தார். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் அருப்புக்கோட்டை ஆடை.மு.காசாமைதீன் புத்தகம் பரிசளித்தார்.

விருதுநகர் மாவட்ட செயலாளர் விடுதலை தி.ஆதவன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். இராசபாளையம் மாவட்ட கழக தலைவர் இல.திருப்பதி, செயலாளர் இரா.கோவிந்தன், துணைத் தலைவர் பூ.சிவகுமார், அவரது இணையர் சி.மகேஸ்வரி, மாவட்ட ப.க. செயலாளர் கோ.பெத்தையா, அமைப் பாளர் மு.முத்தரசு, திருவில்லிபுத்தூர் ஒன்றிய கழக அமைப்பாளர் கு.போத்திராசு, விருது நகர் மாவட்டக் காப்பாளர் அ.தங்கசாமி, அமைப்பாளர் வெ.முரளி, துணை அமைப்பாளர் பெ.சந்தனம், துணைத் தலைவர் ம.கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் வெ.புகழேந்தி, சிவகாசி மாநகர் கழக தலைவர் மா.முருகன், செயலாளர் து.நரசிம்மராஜ், இளை ஞரணி அமைப்பாளர் மு.ஜீவா முனிஸ்வரன், அருப்புக்கோட்டை நகர கழக அமைப்பாளர் க.சுப்பிரமணி, ஒன்றிய கழக செயலாளர் இரா.முத்தையா, இளை ஞரணித் தலைவர் க.திருவள்ளுவர், அவரது இணையர் இராசலட்சுமி, மல்லாங்கிணறு ஆதிமூலம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், தோழமை இயக்கப் பொறுப்பாளர்கள், தோழர்கள் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

நிகழ்வின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.5000-/ மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர்.

நிறைவாக ந.பொன் மேனி ராஜயோகம் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *