பெருந்துறையில் ரூ.900 கோடியில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்கிறது மில்கி மிஸ்ட் நிறுவனம்..!

1 Min Read

ஈரோடு, பிப்.6 ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.900 கோடியில் மில்கி மிஸ்ட் நிறுவனம் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய உள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்படும் மில்கி மிஸ்ட் ஆலை பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி துறையில் முக்கிய நிறுவனமாக விளங்கி வருகிறது. கிரீம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பால் பொருள்கள் உற்பத்தியை மில்கி மிஸ்ட் இந்த ஆலையில் செய்து வருகிறது. இந்நிலையில் மில்கி மிஸ்ட் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, ரூ.1,777 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் முதல் கட்டமாக ரூ.900 கோடி முதலீடு செய்துள்ளது.
பெருந்துறையில் உள்ள தொழிற்சாலையை 2.26 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய மில்கி மிஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மில்கி மிஸ்ட் ஆலை விரிவாக்கத்தினால் கூடுதலாக 450 பேருக்கு கூடுதலாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இதற்கான பல்வேறு அனுமதிகளை பெறுவதற்கு மில்கி மிஸ்ட் நிறுவனம் விண்ணப் பித்துள்ள நிலையில் அனுமதிகள் கிடைத்தவுடன் விரிவாக பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் கூடுதல் விரிவாக்க ஆலையானது செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *