பொற்பனைக்கோட்டையில் அகழாய்வில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறு பகுதியும், எலும்புமுனைக் கருவியும் கண்டெடுப்பு

2 Min Read

புதுகை, பிப்.5 புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், இயக்குநர் தங்கதுரை தலைமையில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட அகழாய்வு முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி முதல் 2-ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது.

வடகிழக்குப் பருவமழையால் அகழாய்வு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஜன. 20-ஆம் தேதி முதல் 7 இடங்களில் மீண்டும் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. அதில், ஒரு குழியில் 196 செ.மீ. ஆழத்தில் எலும்புமுனைக் கருவி கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கருவி 7.8 கிராம் எடையில், 7.4 செ.மீ. நீளம், 1 செ.மீ. விட்டம் கொண்டுள்ளது. மற்றொரு குழியில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறு பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை கண்ணாடி மணிகள், வளையல்கள், இரும்பு ஆணி, குளவிக்கல், சூதுபவள மணி உள்ளிட்ட 1,743 தொல்பொருட்கள் கிடைத்துள்ளதாக அகழாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெம்பக்கோட்டை அகழாய்வில் உருண்டை வடிவ மெருகேற்றும் கற்கள் கண்டெடுப்பு

விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை அருகே உள்ள விஜயகரிசல் குளத்தில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

இதில் ஏராளமான மண்பாண்ட பொருட்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட காதணிகள், சங்கு வளையல்கள், தங்க ஆபரணம், உருவ பொம்மைகள், சதுரங்க ஆட்ட காய்கள், வட்ட சில்லுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் வெம்பக்கோட்டை அகழாய்வில் தற்போது உருண்டை வடிவ மெருகேற்றும் கற்கள் கிடைத் துள்ளன. மெருகேற்றும் கற்களை கலைநயமிக்க சங்கு வளையல் உள்ளிட்ட அணிகலன்கள், அலங்கார பொருட் களை தயாரிக்கவும், மெருகேற்றவும் பயன்படுத்தி உள்ளனர்,
முதல் இரண்டு கட்டங்களிலும் சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய சில்லுவட்டுகள் மட்டுமே கிடைத் தன. மேலும் பொழுதுபோக்கு விளை யாட்டுகளுக்கு சுடு மண்ணால் செய் யப்பட்ட ஆட்ட காய்கள், தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய்களையும் பயன்படுத்தி வந்துள்ளனர். இதுவரை 3,200 பொருட்கள் கிடைத்துள்ளதாக அகழாய்வு இயக்குநர் பொன் பாஸ்கர் தெரிவித்தார். என அகழாய்வு இயக்குநர் பொன்பாஸ்கர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *