சேலம், பிப்.5 சேலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம், 1.2.2025 அன்று மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு இல்லத்தில் மதியம் 1.30 மணியளவில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு வீரமணி ராஜு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சி.பூபதி அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன்
மேட்டூர் மாவட்ட தலைவர் கா. நா. பாலு, நாமக்கல் மாவட்ட தலைவர் குமார், ஆத்தூர் மாவட்ட தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் சிறப்புரையாற்றினார். மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி கருத்துரை வழங்கினார்.
இல.நடராசன், குமாரபாளையம் நகர தலைவர் சு.சரவணன், குமாரபாளையம் நகர செயலாளர் காமராஜ்,கா. சிறீதர், மணிமாறன், சுஜாதா தமிழ்ச்செல்வன், ம.அய்யள், கலை அரசி, மல்லிகா, வாசந்தி வீரமணி, சீனிவாசன், கஸ்தூரி, காயத்ரி, சுந்தர், சண்முகம், பன்னீர்செல்வம், ரவி பொதுக்குழு உறுப்பினர் கமலம், மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோ.வி அன்புமதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்களை மாநில ஒருங்கி ணைப்பாளர் ஊமை. ஜெயராமன் விரி வாக எடுத்துரைத்தார்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
15.02.2025 சிதம்பரம் பொதுக்குழு விற்கு சேலத்தில் இருந்து தனி வாக னத்தில் தோழர்கள் கலந்து கொள்வது,
பொதுக்குழுவில் ‘விடுதலை’ சந்தா, ‘உண்மை’ சந்தாக்களை அதிக அளவில் தமிழர் தலைவரிடம் அளிப்பது,
மார்ச் 10 மணியம்மையார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை மாவட்ட மகளிரணி சார்பில் நடத்துவது,
தொழிலாளரணிக்கு புதிய உறுப்பி னர்களை சேர்த்து, பிப்ரவரி மாத இறு திக்குள் மாநில பொறுப்பாளர்களை அழைத்து கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
புதிய பொறுப்பாளர்கள்
சேலம் மாவட்ட இளைஞரணிக்கு நியமிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள்:
இளைஞரணி தலைவர் க.கார்த்திக்
இளைஞரணி துணைத் தலைவர் வீ.மணிமாறன்,
இளைஞரணி செயலாளர் ப.விஜய்,
இளைஞரணி துணை செயலாளர் மு.கபில்
தாதகாபட்டி பகுதி செயலாளர் சீனிவாசன் நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும், சேலம் மாவட்ட கழகம் சார்பில், மாட்டுக்கறி பிரியாணி விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.