தென் சென்னை மாவட்ட இளைஞரணி மற்றும் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்

Viduthalai
2 Min Read

பகுதி தோறும் கிளைக் கழகங்களை புதுப்பித்தல், பரப்புரை கூட்டங்களை நடத்த முடிவு

ெசன்னை, பிப்.5 கடந்த 1.2.2025 அன்று மாலை 5.30 மணி அளவில் சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் தென் சென்னை மாவட்ட இளைஞரணி மற்றும் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகப் பொன்முடி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் கூட்டத்தில், கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் கருத்துரை வழங்கினார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.

தீர்மானங்கள்
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன :-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவரும், மேனாள் ஒன்றிய இணை அமைச்சரும், ஈரோடு சட்டமன்ற உறுப்பினரும், சுயமரியாதை வீரருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவிக்கிறது.
தென்சென்னை மாவட்ட கழக இளைஞரணி சார்பாக நகரங்கள். , கிளைக் கழகங்கள் முழுவதும் கழக இலட்சியக் கொடியை ஏற்றியும், புதிய கிளைக் கழகம் அமைத்தும் கழக இளைஞரணியை புதுப்பிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
தென்சென்னை மாவட்டத்தில் கழக இளைஞரணி சார்பில் ஏராளமான இடங்களில் தகவல் பலகை அமைத்தல், துண்டறிக்கை பிரச்சாரம் செய்தல், தெரு முனைப் பிரச்சாரம் செய்தல்.

பெரியார் பேசுகிறார் நிகழ்வினை தொடர்ச்சியாக நடத்துதல் என தீர்மானிக்கப்படுகிறது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளே டான ‘விடுதலை’ நாளேட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக மாவட்ட கழக இளைஞரணி சார்பில் அதிக அளவில் சந்தாக்களை வழங்கிடவும், பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நிதி வழங்கிடவும் முடிவு செய்யப்படுகிறது.
பிப்ரவரி 9 அன்று வடசென்னை மாவட்ட கழகம் சார்பில் தணிகாசலம் நகர் கொளத்தூரில் நடைபெறும் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் அதிக அளவில் பங்கேற்பது என தீர்மானிக்கப்படுகிறது.
பிப்ரவரி 15 இல் சிதம்பரத்தில் நடை பெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் மாவட்டம் சார்பில் பெருமளவில் தோழர்கள் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

புதிய பொறுப்பாளர்கள்
தென் சென்னை மாவட்ட இளை ஞரணி புதிய பொறுப்பாளர்கள் அறி விக்கப்பட்டனர்.
மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் மு. சண்முகப்பிரியன், சா. தாமோதரன், ச.மகேந்திரன், பெரியார் யுவராஜ், அ. அன்பு, வெ.விவேக், மாணவர் கழக சஞ்சய் ஆகியோர் கருத்துகளை கூறினர்.
கோ.வீ.ராகவன், இரா.ரவி, த.ராஜா மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். ச.மாரியப்பன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *