கோவையில் பரபரப்பாக பெரியார் புத்தகங்கள் விற்பனை!

Viduthalai
1 Min Read

கோவை, பிப். 5- கோவையில் ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் பெரியார் புத்தக நிலையம் 2017ஆம் ஆண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின் படி கழக வெளியீடுகள் புத்தகங்கள் பரப்பும் பணி மற்றும் இயக்க தோழர்கள், ஆத ரவாளர்களை தொடர்பு கொண்டும் புதிய தோழர் களை சந்தித்தும் விடுதலை நாளிதழ், உண்மை மாத இருமுறை இதழ், பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசன லிஸ்ட் ஆங்கில மாத இதழ் ஆகியவற்றிற்கு சந்தா சேகரிப்பு பணி கள் உள்ளிட்டவை தொடர்ச் சியாக நடைபெற்று வரு கிறது.
இந்த ஆண்டு 2025 ஜனவரி மாதத்தில் கழக ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு அவர்களின் வேண்டு கோளை ஏற்று வட கோவை, சுந்தராபுரம், நரசிம்ம நாயக்கன் பாளையம், காரமடை, வடவள்ளி, இடையர் பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நூற்றுக்கணக்கான புத்தகங்கள் மற்றும் நாள்காட்டி, நாட்குறிப்பு, உள்ளிட்டவை ரூபாய் 13600 மதிப்புள்ள புத்தகங் கள் பரப்பும் பணி நடை பெற்றது.

01.02.2025இல் கவுண்டம்பாளையம் பகுதி கழக திமுக துணை செயலாளர் எம்.கண்ணகி அவர்களை நேரில் சந்தித்து கழக வெளியீடு புத்தகங்கள் குறித்து ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் & பெரியார் புத்தக நிலைய காப்பாளர் அ.மு.ராஜா பகிர்ந்து கொண்ட போது தந்தை பெரியாரின் சிந்தனை செல்வங்கள் தொகுப்பு அனைத்து புத்தகங்கள் மற்றும் மஞ்சை வசந்தன் எழுதிய இவர் தான் பெரியார் உள்ளிட்டவைகளை உரிய தொகையை கொடுத்து பெற்று கொண்டார். அதேபோல இடையர் பாளையம் 16ஆவது பகுதி திமுக அவைத்தலைவர் சுப்பிரமணியம் பெரியார் பிஞ்சு மாத இதழுக்கு ஓராண்டு சந்தா தொகை ரூ.600 வழங்கினார்.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *