மதுரை, பிப். 5- மதுரை விராட்டிபத்துபகுதி திராவிடர் கழகதலைவரும் நீண்ட நாள் கழகத் தோழரு மான ரெ.அய்யாச்சாமி (72) பிப்ரவரி 1ஆம் தேதி காலை 8 மணிக்கு இயற்கை எய்தினார்.
இரண்டு நாட்களுக்கு முன் அவர் இல்லத்தில் தலைசுற்றல்,மயக்கம் காரணமாக கீழே விழுந்த நிலையில் தலையில் பாதிப்பு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.அவர் வாழ்ந்த விராட்டிபத்து பகுதியில் பெரியார் மறுமலர்ச்சி மன்றம் எனும் பெயரில் படிப்பகம் ,கொடிக்கம்பம் வைத்து தகவல் பலகை அமைத்து தொடர்ந்து பெரியாரின் கருத்துகளை பரப்புரை செய்தவர்.1983 இல் தமிழர் தலைவர் ஆசிரியர், தொடர் பயணமாக வருகை தந்தபோது வரவேற்பு கூட்டம் நடத்தியவர். பொதுச்செயலாளர் துரை.சக்கரவர்த்தி தலைமையில் மூடநம்பிக்கை பேரணி, தீமிதி,பொதுக் கூட்டத்தை நடத்தியவர் .அப்பகுதியில் நம் தோழர்கள் வருவதற்கு காரணமாக இருந்தவர், அப்பகுதியில் தொடர்ந்து பொதுக் கூட்டங்களை நடத்தியதோடு போராட் டங்களில் கலந்துகொண்டு கைதானவர் உடல் நலமு டன் இருந்த வரையில் மாவட்ட கழக கூட்டங்களில்
நிகழ்ச்சிகளில் தவறாது பங்கெடுத்தவர்.மதுரை மாநகரத்தில் செயலாற்றிய தூயதொண்டருக்கு மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் வீரவணக்கமும், அவரிடம் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவிக்கப்பட்டது.
மறைந்த அய்யா அவர்களின் உடல் உடல்கூறாய்விற்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிறகு விராட்டி பத்தில் உள்ள வீட்டில் மாலை 6-00 மணிக்கு இறுதி நிகழ்வு நடைபெற்றது
காப்பாளர் வே.செல்வம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு, செயலாளர் கவிஞர் சுப.முருகானந்தம், மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.முருகானந்தம், துணைத்தலைவர்,ந.முருகேசன், துணைத்தலைவர் பொ.பவுன்ராஜா, பேராசிரியர் பெரியார் பித்தன்,மாநகர் மாவட்ட செயலாளர் இரா.லீ.சுரேசு,
துணைச் செயலாளர் க.தனுஷ் கோடி, துணைச் செயலாளர க.சிவா, நல்லதம்பி,சுப்பையா,போட்டோ ராதா,மாவட்ட இளைஞரணி செயலாளர், காசி,பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பழனிவேல்ராசன், பேக்கரி கண்ணன் ஆகியோர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்தனர்.