அரூர் கழக மாவட்ட தோழர்கள் சந்திப்பு கூட்டம்

1 Min Read

தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்.கி வீரமணி அவர்களின் அறிவுறுத்தலின்படி புதியதாக பொறுப்பேற்று இருக்கும் மாநில ஒருங்கி ணைப்பாளர் ஊமை. ஜெயராமன் அரூர் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்களையும், தோழர்களையும் நேரில் சந்திக்க உள்ளார்கள். எனவே கீழ்கண்ட இடங்களில், குறிப்பிட்ட நேரத்தில் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

8-2-25 சனிக்கிழமை
காலை 11 மணி
இடம்: தமிழ் செல்வி அச்சகம் கடத்தூர்.
நேரம் மதியம் 12.30
இடம்: பெரியார் மன்றம் பாப்பிரெட்டிப்பட்டி
மாலை 3 மணி
இடம்: சா. ராஜேந்திரனின் இல்லம் அரூர்

மேற்கண்ட நிகழ்ச்சியில் மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை, மாவட்டத் துணைத் தலைவர் ரே.ஆனந்தன், மாவட்டத் துணைச் செயலாளர், வழக்குரைஞர் ரே.வடிவேலன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.ராஜேந்திரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தீ. சிவாஜி கழக காப்பாளர் தனசேகரன், ஆகியோர் அனைத்து நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதுடன், அந்தந்த பகுதி தோழர்களுடன் தொடர்பு கொண்டு பங்கேற்க செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பொருள்: இயக்க வளர்ச்சி பணிகள், சிதம்பரம் பொதுக்குழு கூட்டம், விடுதலை சந்தா, பெரியார் உலகம்.
இப்படிக்கு: அ.தமிழ்ச்செல்வன் மாவட்ட கழக தலைவர், கு.தங்கராஜ் மாவட்ட கழகசெயலாளர் அரூர் கழக மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *