வலங்கை கோவிந்தன் படத்தினை கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார்  திறந்து வைத்து நினைவுரை

Viduthalai
1 Min Read

வலங்கை, பிப்.4 கும்பகோணம் கழக மாவட்ட மேனாள் காப்பாளர் வலங்கை கோவிந்தன் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி 01.02.2025 அன்று முற்பகல் 11 மணி அளவில் வலங்கைமான் கோவிந்தன் இல்லத்தில் நடைபெற்றது.
நினைவேந்தல் உரை
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மறைந்த சுய மரியாதைச் சுடரொளி  வலங்கை கோவிந்தனின் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்

தஞ்சை மாவட்ட கழக தலை வர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலை மையேற்று உரையாற்றினார்
கும்பகோணம் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மாவட்ட செயலாளர் சு.துரைராசு ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
மாவட்டத் துணைத் தலைவர் வ. அழகுவேல்,மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ஜில்ராஜ், கும்பகோணம் ஒன்றியத் தலைவர் மகாலிங்கம், வலங்கைமான் ஒன்றியத் தலைவர் பவானி சங்கர், தஞ்சை மாவட்ட மகளிரணி தலைவர் கலைச்செல்வி, உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் நினைவேந்தல் உரையாற்றினர். வலங்கைமான் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

பங்கேற்றோர்
திருவிடைமருதூர் ஒன்றிய துணைத் தலைவர் முருகானந்தம் பட்டீசுவரம் அ.இளவழகன், அ.ராவணன், பாபநாசம் லெனின் பாஸ்கர், குடந்தை ஜெயமணி குமார், மாவட்ட தொழிலாளர் அணி துணைச் செயலாளர் சங்கர், பாபநாசம் ஒன்றிய தொழிலாளரணி அமைப்பாளர் பெரியார் கண்ணன், இந்திரஜித், ஒன்றிய மகளிரணி தலைவர் பரிமளம் பத்மநாதன், பூபாலன், ராதாகிருஷ்ணன்  உள்ளிட்ட கழகத் தோழர்கள் நண்பர்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
மகன் இறையன்பு, மகள்கள் சமதர்மம், சமத்துவம், சமரசம் மருமகன்கள் நாகராஜ், சற்குணன் சிவக்குமார்,மருமகள் சுபா, பேரக்குழந்தைகள் மணிமேகலை, ஆதவன், வெண்மதி, பகலவன், இளங்கதிர், நிலவொளி, செங்கதிர் ஆகியோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *