திருச்சியில் மூவர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் ஆய்வு! வாழ்க்கை வரலாற்று ஒளிப்படங்களை அமைக்கவும் உத்தரவு!

viduthalai
0 Min Read

திருச்சி, பிப். 4- திருச்சியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், ஏ.டி. பன்னீர்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோரின் மூவர் மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அப்போது, மணிமண்டபங்களில் அவரவரின் வாழ்க்கை வரலாற்றை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள, ஒளிப்படங்களாக காட்சிப்படுத்துமாறு அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

நேற்று முன்தினம் (2.2.2025) முதலமைச்சர்

மு.க.ஸ்டாலின், திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் உள்ள மூவர் மணிமண்டபத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், ஏ.டி. பன்னீர்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *