திருச்சியில் மூவர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் ஆய்வு! வாழ்க்கை வரலாற்று ஒளிப்படங்களை அமைக்கவும் உத்தரவு!

0 Min Read

திருச்சி, பிப். 4- திருச்சியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், ஏ.டி. பன்னீர்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோரின் மூவர் மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அப்போது, மணிமண்டபங்களில் அவரவரின் வாழ்க்கை வரலாற்றை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள, ஒளிப்படங்களாக காட்சிப்படுத்துமாறு அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

நேற்று முன்தினம் (2.2.2025) முதலமைச்சர்

மு.க.ஸ்டாலின், திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் உள்ள மூவர் மணிமண்டபத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், ஏ.டி. பன்னீர்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *