கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 4.2.2025

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:
< ‘மேக் இன் இந்தியா’ ஒரு நல்ல யோசனை; ஆனால், பிரதமர் மோடி தோற்றுவிட்டார் – ராகுல் காந்தி விமர்சனம். சீனா இந்திய எல்லையை ஆக்கிரமித்து வருவதாக குற்றச்சாட்டு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
< கும்பமேளா உயிரிழப்பு குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு மோடி, யோகிக்கு எதிராக முழக்கம்.
< கும்பமேளாவில் இறந்த ஆயிரக்கணக்கானோருக்கு அஞ்சலி: கார்கே பேச்சால் மாநிலங்களவையில் அமளி. இது எனது மதிப்பீடு தான். ஆனால் எனது மதிப்பீடு சரியில்லை என்றால் அரசு சரியான புள்ளி விவரங்களை வழங்க வேண்டும் மாநிலங்களவையில் மல்லிகார்ஜூன கார்கே அதிரடி.
< தெலுங்கானா ஜாதிவாரி சர்வே அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல்; பிற்படுத்தப்பட்டோர் சதவீதம் குறைத்து காட்டப்பட்டுள்ளதாக பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் கருத்து.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< மணிப்பூர் கலவரத்துக்கு முதலமைச்சர் பைரன் சிங்கிற்கு தொடர்பா? கசிந்த ஆடியோ டேப்கள் குறித்து உச்சநீதிமன்றம் தடயவியல் அறிக்கை அளிக்க உத்தரவு.
< சிறுபான்மை எம்.பி.க்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும், எஸ்சி/எஸ்டி மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் மக்களவையில் கனிமொழி பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< மகாராஷ்டிரா அரசு அலுவலகங்களில் மராத்தியில் பேசுவது கட்டாயம். அனைத்து அலுவலகங்களிலும் உள்ள கணினி விசைப்பலகையில் ரோமன் எழுத்துக்கள் தவிர மராத்தி தேவநாகரி எழுத்துக்கள் இருக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
< தேர்தல் ஆணையர்கள் தேர்வுக் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கியது குறித்து வழக்கு; பிப்ரவரி 12 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க வாய்ப்பு.
< நிர்மலா சீதாராமனுக்கு பட்ஜெட் வாசிக்க உதவியது அரசமைப்பு சட்டமே; மனுஸ்மிரிதி அல்ல. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் அரசமைப்பின் காரணமாக அதிகாரம் பெற்றுள்ளனர், மனுஸ்மிருதி அல்ல, மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவையில் பேச்சு.
< உத்தரகண்டின் யுசிசி விதிகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தால் வலுப்படுத்தப்பட்ட தனிநபர் உரிமைகள் அச்சுறுத் தலுக்கு உள்ளாகியுள்ளது என்கிறது தலையங்கம்.
.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *