சென்னை, பிப். 3- இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். ரயில் பயணத்திற்கான அனைத்து சேவைகளும் இப்போது தனித்தனி செயலிகளில் கிடைக்கிறது.
முன்பதிவு டிக்கெட், முன் பதிவு இல்லாத டிக்கெட், மின்சார ரயில்களுக்கான டிக்கெட், உணவு ஆர்டர் செய்ய உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்கும் ரயில்வே செயலிகள் இருந்தாலும் ஒவ்வொரு செயலியையும் தனித்தனியாக பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில் தனித்தனி செயலிகளின் சேவைகளை ஒன்றிணைத்து ஒரே ஒரு சூப்பர் செயலியாக அறிமுகம் செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சர் கூறி இருந்தார்.
‘ஸ்வா ரயில்’
அதன்படி இந்த சூப்பர் செயலி ‘ஸ்வா ரயில்’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில், முன்பதிவு டிக்கெட், முன் பதிவில்லாத டிக்கெட், உணவு ஆர்டர், ரயில் களின் வருகை புறப்பாடு, சீசன் பாஸ், டிக்கெட்டின் பி.என்.ஆர். நிலை உள்ளிட்ட அனைத்து சேவை களையும் எளிதாக பெற முடியும்.
அய்.ஆர்.சி.டி.சி
ஏற்கெனவே அய்.ஆர்.சி.டி.சி.யில் உள்ள நுழைவு விவரங்களை வைத்து உள்ளே செல்லலாம். ஏற்கெனவே கணக்கு இல்லாதவர்கள் தங்களது செல்போன் எண், இ-மெயில் முகவரி கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். முதல் பக்கத்தில் ரயில்வே சேவைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன. நாம் விரும்பும் சேவைகளை எளிதாகப் பெறலாம். பயணிகள் தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில் ரயில் மடாட் வசதியும் இந்த செயலியில் செய்யப்பட்டுள்ளது.
பிளே ஸ்டோர்
இந்த செயலி, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செயலியை பொறுத்த வரையில் தட்கல் டிக்கெட் மிக எளிதாகவும் விரைவாகவும் ‘புக்’ செய்ய முடியும். நடைமேடை டிக்கெட் எடுத்தல், சரக்கு அனுப் புவது, அதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்பது, கட்டணம் செலுத் துவது உள்ளிட்ட வசதிகளும் இதில் இடம் பெற்று உள்ளன.
இன்னும் சில தினங்களில் இந்த சூப்பர் செயலி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.