ரயில் டிக்கெட், சீசன் பாஸ் எளிதாகப் பெறலாம் ரயில் பயணிகளுக்காக ‘சூப்பர் செயலி’ அறிமுகம் அனைத்து ரயில் சேவைகளும் ஒரே செயலியில் பெற முடியும்

1 Min Read

சென்னை, பிப். 3- இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். ரயில் பயணத்திற்கான அனைத்து சேவைகளும் இப்போது தனித்தனி செயலிகளில் கிடைக்கிறது.

முன்பதிவு டிக்கெட், முன் பதிவு இல்லாத டிக்கெட், மின்சார ரயில்களுக்கான டிக்கெட், உணவு ஆர்டர் செய்ய உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்கும் ரயில்வே செயலிகள் இருந்தாலும் ஒவ்வொரு செயலியையும் தனித்தனியாக பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில் தனித்தனி செயலிகளின் சேவைகளை ஒன்றிணைத்து ஒரே ஒரு சூப்பர் செயலியாக அறிமுகம் செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சர் கூறி இருந்தார்.

‘ஸ்வா ரயில்’

அதன்படி இந்த சூப்பர் செயலி ‘ஸ்வா ரயில்’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில், முன்பதிவு டிக்கெட், முன் பதிவில்லாத டிக்கெட், உணவு ஆர்டர், ரயில் களின் வருகை புறப்பாடு, சீசன் பாஸ், டிக்கெட்டின் பி.என்.ஆர். நிலை உள்ளிட்ட அனைத்து சேவை களையும் எளிதாக பெற முடியும்.

அய்.ஆர்.சி.டி.சி

ஏற்கெனவே அய்.ஆர்.சி.டி.சி.யில் உள்ள நுழைவு விவரங்களை வைத்து உள்ளே செல்லலாம். ஏற்கெனவே கணக்கு இல்லாதவர்கள் தங்களது செல்போன் எண், இ-மெயில் முகவரி கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். முதல் பக்கத்தில் ரயில்வே சேவைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன. நாம் விரும்பும் சேவைகளை எளிதாகப் பெறலாம். பயணிகள் தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில் ரயில் மடாட் வசதியும் இந்த செயலியில் செய்யப்பட்டுள்ளது.

பிளே ஸ்டோர்

இந்த செயலி, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செயலியை பொறுத்த வரையில் தட்கல் டிக்கெட் மிக எளிதாகவும் விரைவாகவும் ‘புக்’ செய்ய முடியும். நடைமேடை டிக்கெட் எடுத்தல், சரக்கு அனுப் புவது, அதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்பது, கட்டணம் செலுத் துவது உள்ளிட்ட வசதிகளும் இதில் இடம் பெற்று உள்ளன.
இன்னும் சில தினங்களில் இந்த சூப்பர் செயலி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *