சேலம், பிப். 3- சேலம் கழக மாவட்டத்தின் மகளிர் அணி திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம், 1.2.2025 அன்று வாசந்தி வீரமணியின் இல்லத்தில் காலை 11:30 மணி அளவில் நடைபெற்றது.
கலந்துரையாடல் கூட்டத்திற்கு சேலம் மாவட்ட மகளிர் அணி தலைவர் சுஜாதா தமிழ்ச்செல்வம் தலைமை தாங்கினார்.
மகளிர் பாசறை தலைவர், ப.காயத்ரி அனைவரையும் வரவேற்று உரை ஆற்றினார்.
பொதுக்குழு உறுப்பினர் கமலம் அம்மாள், மகளிர் அணி செயலாளர் அம்மா சு.மல்லிகா, மகளிர் பாசறை துணைத் தலைவர் கலையரசி, ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
நிகழ்வில் சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, மாவட்ட செயலாளர் சி பூபதி, மேட்டூர் கழக மாவட்ட தலைவர் கா.நா. பாலு ஆத்தூர் கழக மாவட்டத் தலைவர் அ. சுரேஷ், நாமக்கல் கழக மாவட்ட தலைவர் குமார், மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோ.வி.அன்புமதி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
30 சந்தாக்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், இயக்க செயல்பாடுகளில் மகளிர் தோழர்களின் பங்களிப்பு இன்னும் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்றும், நம் வீட்டு குடும்ப மகளிரை இன்னும் இயக்கத்தில் இணைக்க வேண்டும் என்றும் கூறி வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார்.
கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்களை குறித்து உரையாற்றிய மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி, திராவிடர் கழக மகளிர் அணி திராவிட மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும்,
ஒவ்வொரு மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பெரியார் பிஞ்சு சந்தாவான 30 சந்தாக்களில், சேலம் கழக மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் வீரமணி ராஜா 5 பெரியார் பிஞ்சு சந்தாக்களை வழங்கி உள்ளார்.
நடைபெற உள்ள சிதம்பரம் பொதுக்குழுவில், மேலும் ஒரு பத்து சந்தாக்களை தமிழர் தலைவர் அவர் களிடம் அளிக்க வேண்டும் என வேண்டு கோள் விடுத்தார்.
இயக்கத் தோழர்களின் இல்லங்களுக்குச் சென்று பெரியார் பிஞ்சு சந்தாக்கள் சேர்ப்பது.
தமிழர் தலைவர் பிறந்த நாளை மகளிர் அணி – மகளிர் பாசறை சார்பாக சிறப்பாக கொண்டாடுவது.
தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் படி தொடர்ந்து, இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நடத்துவது,
வாய்ப்புள்ள இடங்களில் தமிழர் தலைவர் அவர்களின் அறிவிப்பினை ஒட்டி வைக்கம் நூற்றாண்டு விழா ,சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டங்கள் நடத்துவது முதல் தவணையாக 10 பெரியார் பிஞ்சு சந்தாக்களை அளிப்பது
மாவட்ட கிளை, ஒன்றிய அளவில் மகளிர் பொறுப்பாளர்களை நியமிப்பது.
கீழ்க்கண்ட மகளிர் தோழர்கள் மகளிரணி பொறுப்பாளர்களாகவும் மகளிர் பாசறை பொறுப்பாளர்களாகவும் கலந்துரையாடல் கூட்டத்தில் நியமிக்கப் பட்டனர்.
மகளிரணி
தலைவர்: த. சுஜாதா, துணைத் தலைவர் : வீ.வாசந்தி, செயலாளர் சு.மல் லிகா, துணைச் செயலாளர்:பூ. கோமதி
மகளிர் பாசறை
தலைவர்: ப.காயத்ரி, துணைத் தலைவர்: மருத்துவர் ச.மேனகா, செயலாளர்: ப.கஸ்தூரி, துணைச் செயலாளர்: சு.சிறீலேகா, கலையரசி.
இறுதியாக மகளிர் பாசறை செயலா ளர் ப.கஸ்தூரி நன்றி கூற கூட்டம் இனிதே முடிவடைந்தது.