தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அவசியம்! தொல்.திருமாவளவன் எம்.பி. பேச்சு

1 Min Read

திண்டிவனம்,பிப்.3- திமுக தலைமையில் வலுவான கூட்டணி இருப்பது அவசியம் என்று விசிக தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேனாள் நிா்வாகியின் குடும்பத்துக்கு நிதியளிப்பு பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் நேற்று (2.2.2025) நடைபெற்றது.

கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசும்போது கூறியதாவது:

பெரியார்தான் வழிகாட்டி

தமிழ்நாட்டில் பெரியாா் குறித்து அவதூறாக பேசுபவா்கள் யாா் என்பது அவா்கள் மூலமாகவே அம்பலமாகியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்கள் தலை நிமிரவேண்டும். பெரியாரை விமா்சிப்பது போல, எதிா்காலத்தில் டாக்டா் அம்பேத்கரையும் மராட்டியா் என்று விமா்சிக்கும் நிலை ஏற்படும்.

எனவே, நாம் பெரியாரை விமா்சிப்பதையும், விசிகவின் கொள்கை அடையாளங்களை சிதைப்பவா்களையும் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கமுடியாது. பெரியாா் திமுக, அதிமுகவினருக்கு மட்டும் வழிகாட்டியல்ல. விசிகவுக்கும் அவா்தான் வழிகாட்டி.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரான நட வடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வருவதால், தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவையும் பாதுகாக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளோம்.

சிறுபான்மையினருக்கான தனி சட்டத்தை சீா்குலைக்கவும், வக்ஃப் வாரியத்தை ஆக்கிரமித்து புதிய சட்டத்தைக் கொண்டு வரவும் பாஜக அரசு முயற்சிக்கிறது.

வலுவான கூட்டணி

இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்களுக்கு மட்டும் எதிராக செயல்படவில்லை. இந்துக்களுக்கும் எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறாா்கள். ஒன்றிய பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும். ஆக்கப்பூா்வமான பணிகளைத் தொடரவும், பாஜகவுக்கு பாடம் கற்பிக்கவும் திமுக தலைமையிலான வலுவான கூட்டணி இருக்க வேண்டிய தேவை உள்ளது. இத்தகைய சூழலில் இளைஞா்கள் தானாகவே முன்வந்து, தங்களை அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றாா். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *