கேலிக்கூத்தான மதச் சார்பின்மை: கடந்த ஆட்சியின் அவலம் தொடரலாமா?

1 Min Read

அரசியல்

கடந்த அதிமுக ஆட்சியில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பல பேருந்து நிறுத்தங்களில் பெரிய அளவில் பிள்ளையார் படம் பொறிக்கப்பட்ட டைல்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பல்வேறு மதத்தினராலும் பயன்படுத்தப்படும் பேருந்து நிறுத்தங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் பிரதிபலிக்கும் மதச் சின்னங்களை, கடவுளர் படங்களை, அரசு நிதியில் கட்டப்படும் கட்டடங்களில் வைத்தது சரியா? 

மற்ற மற்ற மதத்தினரும் இப்படி பொது இடங்களில் தங்கள் மதக்குறியீடுகளை வைக்க முற்பட்டால் அதன் விளைவு என்ன?

மதச்சார்பற்ற அரசு என்பதை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கடந்த ஆட்சியில் நடந்த அவலங்களை அகற்ற முயல வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *